குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை.. சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிவிப்பு!
சென்னை: கோடை விடுமுறையொட்டி, வரும் மே 1 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று 15 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்றங்கள் உள்ளன. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைப் பரிசீலித்த உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அலி இதுதொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் மே 15 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேவேளையில், அந்த காலகட்டத்தில் குடும்ப நல நீதிமன்ற அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications