காய்கறி விலை உயர்ந்தும் பலன் இல்லையே.. முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த ஆதங்கம்
சென்னை: விலைவாசி உயர்வு தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கூட்டுறவு மற்றும் வேளாண் துறை அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் தக்காளி விலை ஒருபக்கம் உயர்ந்து கொண்டே செல்கிறது என்றால் மற்றொரு பக்கம் சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதேபோல், பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகிறது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்து வருகிறது.

அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் குறிப்பிட்ட அளவே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுவதால் இதுவும் போதுமானதாக இல்லை. இந்த நிலையில் விலைவாசி உயர்வு தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கூட்டுறவு மற்றும் வேளாண் துறை அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-
உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். காய்கறிகளின் விலை உயரந்தாலும் அதன் பலன் விவசாயிகளுக்கு நேரடியாக செல்லவில்லை. விவசாயிகளுக்கு நேரடியாக பலன் சென்று சேர வேளாண் துறை தனி கவனம் செலுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கடுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications