Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SIR-க்கு பின் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்து தமிழ்நாட்டில் மொத்தம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை, தேர்தல் ஆணையம் 2025ல் துவக்கியது. எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடந்தது. இந்தப் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, 2025 அக்டோபர் மாத நிலவரப்படி, தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

Final Voter List Released 74 Lakh Voters Deleted in Tamil Nadu After SIR Exercise

சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, இறந்தவர்கள், இரட்டை பதிவு, முகவரி மாற்றம் போன்றவை கண்டறியப்பட்டு, அதில் உள்ள பெயர்கள் நீக்கப்பட்டன. அந்த வகையில், மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தற்போது, 5.43 கோடி பேர் மட்டுமே பட்டியலில் இருந்தனர்.

வாக்காளர் திருத்தம்

இதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும், கடந்த 10 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்ய 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24 லட்சத்த 47 ஆயிரம் பேர் வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.

அதேபோல், இணையதளம் வழியாக 10 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380.

74 லட்சம் பேர் நீக்கம்

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 2025-ல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில்,எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 5.67 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925,

பெண் வாக்காளர்கள் - 2,89,60,838,

மூன்றாம் பாலினம் - 7,617 பேர்

அர்ச்சனா பட்நாயக் பேட்டி

சென்னை தலைமைச் செயலகத்தில், வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2026 அன்று வெளியிடப்பட்டது. அதில், ஆண் வாக்காளர்கள்: 2,66,63,233, பெண் வாக்காளர்கள்: 2,77,06,332, மூன்றாம் பாலினத்தவர்: 7,191 என மொத்தம்: 5,43,76,756 வாக்காளர்கள் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்து இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில், ஆண்கள்: 2,77,38,925, பெண்கள்: 2,89,60,838, மூன்றாம் பாலினம்: 7617 என மொத்தம் 5,67,07,380 பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளன.

விண்ணப்பிக்கலாம்

வரைவு வாக்காளர் பட்டியலை காட்டிலும் இறுதி வாக்காளர் பட்டியலில் 23.30 லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு மொத்தம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மீண்டும் பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இன்று முதல் மீண்டும் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை (Form 6) பொதுமக்கள் வழங்கலாம். வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்துள்ள வாக்காளர்கள் தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார். அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+