மத்திய அரசு நிதி தருவதில்லை.. பொதுமக்களுக்கு பொங்கலுக்கு 1000 ரூபாய் தர முடியவில்லை- தங்கம் தென்னரசு
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் கோரப்பட்ட நிதி கிடைக்காததால், பொங்கல் பரிசுத் தொகை அளிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.
தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பரிசுத் தொகுப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, சர்ச்சரை, முழு கருப்பு உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி ரூ.35.20, சர்க்கரை ரூ.42.84, கரும்புக்கு ரூ.35 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்காக தமிழக அரசு சார்பாக ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்பின் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஒரே நாளில் அனைவருக்கும் வழங்க முடியாது என்பதால், ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வரும் முறையில் டோக்கன் அளித்து வருகின்றனர்.
டோக்கன் வழங்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சின்னமலை அருகே உள்ள டியுசிஎஸ் ரேஷன் கடையில் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி பணியை தொடங்கி வந்தார். இதன்பின் தமிழ்நாடு முழுவதும் இன்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும் இந்த ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படாதது பேசுபொருளாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகயையொட்டி ரூ.1,000 பரிசுத் தொகை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தன. இந்த நிலையில் சட்டப்பேரவையில் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1,000 அளிக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். அதில், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.37 ஆயிரம் கோடி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு ரூ.276 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. SSA திட்டத்தில் ரூ.2,100 கோடியை கூட மத்திய அரசு இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனால் அந்த செலவுகள் அனைத்து மாநில நிதியில் இருந்தே ஈடுபட்டப்படுகின்றன.
இந்த காரணங்களால் தான் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். அதேபோல் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிரின் வங்கிக் கணக்கில் அளிக்கப்பட்டு வந்த உரிமைத் தொகை, இம்முறை பொங்கல் பண்டிகையையொட்டி 9ஆம் தேதியே வங்கி வணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications