சென்னை அண்ணா சாலையில்.. அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து!.. மீட்பு பணிகள் தீவிரம்!
சென்னை: சென்னை அண்ணாசாலை அருகே அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கணினி பொருட்கள் வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

இதையடுத்து தகவலறிந்த எழும்பூர் தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகிறார்கள். அது போல் கட்டடத்தின் உள்ளே சிக்கியவர்களையும் மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன.
அங்குள்ள ஊழியர்கள் ராட்சத கிரேன் மூலம் ஜன்னல்கள் வழியாக மீட்கப்பட்டு வருகிறார்கள். கணினி விற்பனை நிலையத்தில் மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நிகழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.
இந்த கட்டடத்தில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தீயை கட்டுக்குள் கொண்டு வர 50 -க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications