சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் தீ விபத்து! பக்தர்கள் அதிர்ச்சி! தீயை போராடி அணைத்த வீரர்கள்!
சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலை பொறுத்தவரை பிரசித்தி பெற்ற கோவிலாகும். வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று இரவு அரசியல், சினிமா முக்கிய பிரபலங்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதல் சாமானியர்கள் வரை சாய் பாபா கோவிலுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள்ளனர்.

இந்நிலையில் மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் கட்டுமானப் பணிகள் நடப்பதாகவும் அதன் காரணமாக ஓலைகளால் சுற்றி மறைப்பு கட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஓலையில் தீபாவளிக்கு வைத்த ராக்கெட் பட்டாசு பறந்து வந்து விழுந்ததில் தீப்பொறி பற்றி தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
மாலை 6.15க்கு இந்த தீ விபத்து நிகழ்ந்ததாகவும் சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டதால் தீ மேலும் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே இந்த தீ விபத்தில் யாரேனும் காயம் அடைந்தார்களா, பாதிப்புகள் என்ன என்பது பற்றிய விவரங்களை தீயணைப்புத்துறையும், காவல்துறையும் இன்னும் வெளியிடவில்லை.
தீபாவளி அன்று சாய்பாபா கோவில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது சாய்பாபா பக்தர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications