முதலில் நல்ல மனிதராக இருங்கள்.. பிறகு கிருஷ்ணர், அர்ஜுனராக ஆகலாம்.. ரஜினிக்கு சீமான் நெத்தியடி!
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்திற்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்திற்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டார். அதேபோல் அமித் ஷாவை வாழ்த்தியும் அவர் பேசினார்.
அவரின் பாஜக சார்பான பேச்சு பெரிய சர்ச்சையாகி உள்ளது. ரஜினிகாந்த் ரசிகர்களே சிலர் அவருக்கு எதிராக இதனால் கருத்து தெரிவித்துள்ளனர்.

என்ன சொன்னார்
ரஜினிகாந்த் தனது பேச்சில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. அவரது பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது அமித் ஷா யார் என்று மக்களுக்கு தெரிந்து இருக்கும், என்று குறிப்பிட்டார்.

சீமான் பதில்
இதற்கு தற்போது நாம் தமிழர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ரஜினி சொல்வது எல்லாம் சரிதான். இந்த கிருஷ்ணரும், அர்ஜுனரும் யார் மீது போர் தொடுக்க போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அதுதான் தற்போது முக்கியமான கேள்வி. மக்கள் மீதுதான் இவர்கள் போர் தொடுக்க போகிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால்
நீங்கள் அவதாரங்களாக அப்புறம் இருக்கங்கள். முதலில் நல்ல மனிதர்களாக இருங்கள். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும். முதலில் மக்களை பாதிக்கும் திட்டங்களை அரசு கைவிட வேண்டும், என்று சீமான் குறிப்பிட்டு இருக்கிறார்.

கருத்து
இந்த நிலையில் சீமானின் கருத்தை கேட்டு இந்து அமைப்புகளும், ரஜினி ரசிகர்களும், பாஜக கட்சியினரும் கொந்தளித்து இருக்கிறார்கள். எங்களை சீண்டுவதே சீமானின் வெளியாகிவிட்டது என்று விமர்சனம் வைத்துள்ளனர். இதனால் இணையத்தில் பெரும் சண்டை நடந்து வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications