தமிழ்நாட்டின் “டாப்பர்” ஆன மாஜி ஐஏஎஸ்.. முதல் தேர்தலிலேயே சாதித்த சசிகாந்த்.. அடுத்த இடத்தில் யார்?
சென்னை: தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில். இவர் முதல் முறையாக இப்போதுதான் தேர்தலைச் சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் பாஜக கூட்டணி 290 இடங்களிலும், இந்தியா கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை திமுக கூட்டணி ஒட்டுமொத்த 40 தொகுதிகளையும் வென்றிருக்கிறது. 2004 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு 40க்கு 40 அடித்து சாதித்திருக்கிறார் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகித்த ஸ்டாலின்.

தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்.
திருவள்ளூர் - சசிகாந்த் செந்தில்: திருவள்ளூரில் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதியை விட 5 லட்சத்து 72 ஆயிரத்து 155 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார் சசிகாந்த் செந்தில். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார் சசிகாந்த் செந்தில்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், கடந்த 2019 செப்டம்பரில் தனது ஐ.ஏ.எஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார்.
யார் இந்த சசிகாந்த் செந்தில்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை பாஜக சார்பில் தேர்தல் களப்பணிக்காக அனுப்பப்பட்ட அதே வேளையில், காங்கிரஸ் சார்பில் கர்நாடகாவில் களமிறக்கப்பட்டார் சசிகாந்த் செந்தில். கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் திறம்படச் செயல்பட்டார். கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதில் முக்கியப் பங்கு வகித்தார் சசிகாந்த் செந்தில்.
அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் 'சென்ட்ரல் வார் ரூம்' தலைவராகவும் சசிகாந்த் நியமிக்கப்பட்டார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு சசிகாந்த் செந்திலுக்கு வழங்கப்பட்டது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் சசிகாந்த் செந்தில்.
ஸ்ரீபெரும்புதூர் - டிஆர் பாலு: ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் பிரேம் குமாரை விட 4 லட்சத்து 87 ஆயிரத்து, 029 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். மாநிலத்திலேயே இரண்டாவது அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் டிஆர் பாலு.
திண்டுக்கல் - சச்சிதானந்தம்: திண்டுக்கல் லோக்சபா தொகுதி சிபிஐஎம் வேட்பாளர் சச்சிதானந்தம், எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்கை விட 4,43,821 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மாநிலத்திலேயே மூன்றாவது அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் சச்சிதானந்தம். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் வேலுசாமி மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (5 லட்சத்து 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்) வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி - கனிமொழி: தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
பெரம்பலூர் - அருண் நேரு: அதற்கு அடுத்தபடியாக பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு, 3,85,508 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அருண் நேரு (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை 3,89,107 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
-
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
அமைச்சர் பதவி யாருக்கு? சீனியாரிட்டி எல்லாம் Secondary-தான்? மா.செ. கூட்டத்தில் சொன்ன ஸ்டாலின்? -
“அதிமுகவுடன் சேர்த்து மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வச்சிட்டீங்களா?” - எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி! -
ஒரு வாக்குச்சாவடி கூட விடாமல் சக்கர நாற்காலிகள் இருக்கும்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு! -
வேகம் எடுக்கும் திமுக.. வேட்பாளர்கள் யார் யார்.. 17 ஆம் தேதி நேர்காணலை தொடங்குகிறார் ஸ்டாலின் -
2,000 ரூபாய் 'மெகா' பிளான்.. தகரும் தடை? கோட்டையை நோக்கி திமுகவின் மகளிர் உரிமை தொகை அஸ்திரம்! -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications