உருவமே இல்லாத "கண்ணீர் அஞ்சலி" போஸ்டர்.. "அவஸ்தை நிச்சயம் உண்டு".. அசந்து போன ஆலங்குடி..!
கொரோனாவைரஸ் விழிப்புணர்வுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன
சென்னை: இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவார்கள்.. அல்லது தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும் ஒட்டி கொள்வார்கள்.. ஆனால், கொரோனாவால் இறந்தவர்களே, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவார்களா? அப்படித்தான் ஆலங்குடியில் ஒட்டி உள்ளனர்..
இந்த 2வது பரவல் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஆனால், 2வது பரவல் இது வீரியமிக்கது என்று கடந்த டிசம்பர் மாதமே விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தும், நாம்தான் அசால்ட்டாக விட்டுவிட்டோம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தாலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

விழிப்புணர்வு
10 மணிக்கு மேலதான் அதிகமாக சுற்றி கொண்டிருக்கிறார்கள்.. இவர்களை மடக்கி பிடித்து நம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.. இதைதவிர ஏராளமான விழிப்புணர்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆலங்குடி
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.. காரணம், இந்த மாவட்டத்தில் தொற்று நிறைய ஏற்பட்டு வருகிறது.. புதுக்கோட்டையை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இதன் தாக்கம் அதிகமாகி உள்ளது.. மக்களும் விதிகளை மீறி ரோட்டில் நடமாடுகிறார்கள்.. இவர்களுக்காகவே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே இது ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சி.

பேனர்
ஆலங்குடி காமராஜர் சிலை அருகே, ஒரு கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.. அந்த பேனரில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் வழக்கமாக இறந்தவர் போட்டோ அச்சிடப்பட்டிருக்கும்.. ஆனால், இதில் யாருடைய போட்டோவும் இல்லை..

கண்ணீர் அஞ்சலி
மாறாக, "இதில், உங்கள் படம், பெயர் இடம் பெறாமல் இருக்க ஊரடங்கை கடைப்பிடிக்கவும். தேவையின்றி அலைந்தால் அவஸ்தை நிச்சயம் உண்டு.. உங்கள் பாதுகாப்பு, உங்கள் கையில், அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்போம். இப்படிக்கு கொரோனாவால் இறந்த ஆத்மாக்கள் & கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

வைரல்
இதுவரை கொரோனாவால் இறந்தவர்களே ஒன்றுதிரண்டுவந்து, இப்படி ஒரு போஸ்டரை வைத்துள்ளதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது.. இந்த நுாதன விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் தற்போது சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications