உருவமே இல்லாத "கண்ணீர் அஞ்சலி" போஸ்டர்.. "அவஸ்தை நிச்சயம் உண்டு".. அசந்து போன ஆலங்குடி..!
கொரோனாவைரஸ் விழிப்புணர்வுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன
சென்னை: இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவார்கள்.. அல்லது தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும் ஒட்டி கொள்வார்கள்.. ஆனால், கொரோனாவால் இறந்தவர்களே, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவார்களா? அப்படித்தான் ஆலங்குடியில் ஒட்டி உள்ளனர்..
இந்த 2வது பரவல் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஆனால், 2வது பரவல் இது வீரியமிக்கது என்று கடந்த டிசம்பர் மாதமே விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தும், நாம்தான் அசால்ட்டாக விட்டுவிட்டோம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தாலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

விழிப்புணர்வு
10 மணிக்கு மேலதான் அதிகமாக சுற்றி கொண்டிருக்கிறார்கள்.. இவர்களை மடக்கி பிடித்து நம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.. இதைதவிர ஏராளமான விழிப்புணர்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆலங்குடி
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.. காரணம், இந்த மாவட்டத்தில் தொற்று நிறைய ஏற்பட்டு வருகிறது.. புதுக்கோட்டையை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இதன் தாக்கம் அதிகமாகி உள்ளது.. மக்களும் விதிகளை மீறி ரோட்டில் நடமாடுகிறார்கள்.. இவர்களுக்காகவே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே இது ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சி.

பேனர்
ஆலங்குடி காமராஜர் சிலை அருகே, ஒரு கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.. அந்த பேனரில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் வழக்கமாக இறந்தவர் போட்டோ அச்சிடப்பட்டிருக்கும்.. ஆனால், இதில் யாருடைய போட்டோவும் இல்லை..

கண்ணீர் அஞ்சலி
மாறாக, "இதில், உங்கள் படம், பெயர் இடம் பெறாமல் இருக்க ஊரடங்கை கடைப்பிடிக்கவும். தேவையின்றி அலைந்தால் அவஸ்தை நிச்சயம் உண்டு.. உங்கள் பாதுகாப்பு, உங்கள் கையில், அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்போம். இப்படிக்கு கொரோனாவால் இறந்த ஆத்மாக்கள் & கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

வைரல்
இதுவரை கொரோனாவால் இறந்தவர்களே ஒன்றுதிரண்டுவந்து, இப்படி ஒரு போஸ்டரை வைத்துள்ளதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது.. இந்த நுாதன விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் தற்போது சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications