அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை!
மதுரை: பணப் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது தேர்தல் விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பணப் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டி.குன்னத்தூர் இல்லத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தி பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் எழுந்த புகாரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையில் எதுவும் சிக்காததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
திருமங்கலம் தொகுதியில் அதிமுகவின் தேர்தல் பணி மையமாக, ஆர்பி உதயகுமாரின் 'அம்மா கோவில்' செயல்பட்டு வருகிறது. தேர்தல் வியூகங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் இங்கு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதுவரை 5 முறை பறக்கும் படை அதிகாரிகள் இங்கு சோதனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சோதனை குறித்து குற்றம்சாட்டியுள்ள ஆர்பி உதயகுமார், "தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுகின்றனர். அம்மா கோவிலின் ஒவ்வொரு அறையையும் அங்குலம் அங்குலமாகச் சோதனை செய்தார்கள். ஆனால், ஒரு சிறு பொருள் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே நாங்கள் பணியாற்றுகிறோம். ஆனாலும், அதிமுகவின் தேர்தல் பணிகளை முடக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. எங்கள் மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்குப் பயமில்லை" என்று தெரிவித்தார்.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக












Click it and Unblock the Notifications