அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை!
மதுரை: பணப் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது தேர்தல் விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பணப் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டி.குன்னத்தூர் இல்லத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தி பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் எழுந்த புகாரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையில் எதுவும் சிக்காததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
திருமங்கலம் தொகுதியில் அதிமுகவின் தேர்தல் பணி மையமாக, ஆர்பி உதயகுமாரின் 'அம்மா கோவில்' செயல்பட்டு வருகிறது. தேர்தல் வியூகங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் இங்கு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதுவரை 5 முறை பறக்கும் படை அதிகாரிகள் இங்கு சோதனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சோதனை குறித்து குற்றம்சாட்டியுள்ள ஆர்பி உதயகுமார், "தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுகின்றனர். அம்மா கோவிலின் ஒவ்வொரு அறையையும் அங்குலம் அங்குலமாகச் சோதனை செய்தார்கள். ஆனால், ஒரு சிறு பொருள் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே நாங்கள் பணியாற்றுகிறோம். ஆனாலும், அதிமுகவின் தேர்தல் பணிகளை முடக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. எங்கள் மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்குப் பயமில்லை" என்று தெரிவித்தார்.
-
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
"மொத்தம் 1.4 கோடி பேர்".. தமிழகத்தில் தெலுங்கு பேசும் வாக்காளர்கள் எத்தனை பேர்? முழு டேட்டா -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே -
விஜய்க்கு அடிமேல் அடி.. ஸ்டாலின் - எடப்பாடி - சீமானிடம் பின்தங்கிய தவெக.. இந்த 2 மேட்டரை கவனிச்சீங்களா -
சவுமியா, அன்புமணி போட்ட 2 பிளான்.. பென்னாகரம் 2026-ல் தமிழ்க்குமரனுக்கு காத்திருக்கும் அந்த 1 ஆபத்து -
10 நாள்தான் டைம்! வீடு வீடாக போய் ஓட்டு கேளுங்க! நீலாங்கரை வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அறிவுரை -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
திமுக வேட்பாளருக்கே ‘ஸ்கெட்ச்சா? தொண்டாமுத்தூரில் யாரும் எதிர்பார்க்கலையே.. பின்னணியில் எஸ்பி வேலுமணி? -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்!












Click it and Unblock the Notifications