Food: 4 பிரட்டும், கடலைமாவும் இருந்தா போதும்! சிம்பிளான இந்த ஸ்னாக்ஸை சுவையா ட்ரை பண்ணலாம்!
சென்னை: மாலை வேளை வந்தாலே வீட்டில் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை எதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து தர சொல்லி கேட்கிறார்களா? வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யக்கூடிய இந்த பக்கோடாவை செய்து கொடுக்கலாம். அதன்பிறகு பாருங்க பாராட்டிற்கு பஞ்சம் இருக்காது. அப்போ மொறு மொறுப்பான இந்த ஸ்னாக்ஸை சட்டென செய்து அசத்தலாம் வாங்க.

தேவையான பொருட்கள்.
பிரட் - 4.
பிரட் தூள் -1/2கப்
அரிசி மாவு - 1 ஸ்பூன்.
கடலை மாவு - 1 ஸ்பூன்.
நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 3
உப்பு, எண்ணெய்-தேவைக்கு
பிரட் பக்கோடா செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட பிரட்டை சிறிது தண்ணீரில் போட்டு எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீரை உறிஞ்சியதும் நன்றாக பிசைந்து மாவு போல எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் பிரட்தூள், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய, பூண்டு, நறுக்கிய வெங்காயம், உப்பு, கடலைமாவு, அரிசி மாவு கலந்து தண்ணீரை லேசாக தெளித்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நன்றாக சூடானதும் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் ருசியான பக்கோடா ரெடி.
தற்போது ரெடியான பக்கோடாவை தட்டில் வைத்து இப்போது பரிமாறுங்கள். மீண்டும் கண்டிப்பாக செய்துதர சொல்லுவார்கள். மறக்காமல் உங்கள் அனுபவத்தை கமெண்டில் பதிவிடுங்கள். (எழுதியவர், சென்னையை சேர்ந்த நமது வாசகி எம். வசந்தா)












Click it and Unblock the Notifications