சென்னையில் பயங்கர காட்டுத்தீ.. அரை கிமீ தூரம் பற்றி எரியும் பெரும்பாக்கம் சதுப்பு நிலம் - பரபரப்பு
சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் ஆவின் பின்புறம் உள்ள பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சோழிங்கநல்லூரில் ஆவின் பால் பண்ணை அமைந்துள்ளது. இந்த ஆவினின் பின்புறம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாக பெரும்பாக்கம் சதுப்பு நிலம் உள்ளது.

இந்நிலையில் தான் இன்று இரவு திடீரென்று சதுப்பு நிலத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதனால் சதுப்பு நிலத்தில் இருந்த கோரைப்புற்கள், செடிகள், மரங்கள் தீயில் கருகின.
கடந்த சில நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சதுப்பு நிலத்தில் உள்ள கோரைப்புற்கள், செடி, மரங்கள் காய்ந்து போய் இருந்த நிலையில் தீயில் அவை எரிய தொடங்கின. இதுபற்றி உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். சதுப்பு நிலம் என்பதால் தீவிபத்து ஏற்பட்ட இடத்துக்கு உடனடியாக அவர்களால் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் தீயை அணைப்பதில் பிரச்சனை என்பது நீடித்து வருகிறது. தீவிர ஆலோசனைக்கு பிறகு அவர்கள் தீயை அணைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு தீ பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தீ மேலும் பரவுவதை தடுத்து தீயை அணைக்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இந்த தீவிபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை.
அதிகப்படியான வெப்பத்தால் சதுப்பு நிலத்தில் தீவிபத்து ஏற்பட்டதா? இல்லாவிட்டால் உயர்அழுத்த மின்அழுத்த கம்பியால் தீவிபத்து ஏதேனும் ஏற்பட்டதா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இதற்கிடையே தான் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் ஏற்பட்ட தீவிபத்தை அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் செல்போன்களில் வீடியோக்களாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோக்கள் தற்போது பரவி வருகிறது.
-
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications