முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 2 மணி நேரம் விசாரணை.. அடுத்தது என்ன?.. முக்கிய தகவல்கள்!
சென்னை: துணை நடிகை புகாரில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க முன்னாள் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
Recommended Video
துணை நடிகையும் மலேசியா தூதரக அதிகாரியுமான சாந்தினி அ.தி.மு.க முன்னாள் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார். மேலும் 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் பகீர் புகார் கூறி இருந்தார் துணை நடிகை சாந்தினி.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
இதனை தொடர்ந்து மணிகண்டன் மீது மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளை மணிகண்டன் மறுத்தார். ஆனால் அவருக்கும் சாந்தினிக்கும் தொடர்பு இருப்பதாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன.

அதிரடி கைது
இதன் பின்னர் மணிகண்டன் தலைமறைவானார். இரண்டு தனிப்படைகள் அமைத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே மணிகண்டன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர்.

2 மணி நேரம் விசாரணை
தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெங்களுருவில் முகாமிட்டு இருந்த போலீசார் ஒரு தோட்டத்து வீட்டில் வைத்து மணிகண்டனை பொறி வைத்து தூக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து மணிகண்டனிடம் 2 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

நீதிமன்றத்தில் ஆஜர்
துணை நடிகை கொடுத்த புகார் தொடர்பாக கேள்விகளை முன்வைத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதனையடுத்து மணிகண்டனை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினார்கள். மணிகண்டன் தலைமறைவாக இருக்க அவரது உதவியாளர்கள் பிரவீன், இளங்கோ ஆகியோர் உதவியதாக கூறப்படுகிறது. கைதான அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications