அப்போ அண்ணாமலை பேசுனது? அதிமுக - பாஜக கூட்டணி பற்றி நத்தம் விஸ்வநாதன் சொன்ன வார்த்தை!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார். அண்ணாமலையின் முந்தைய விமர்சனம் பற்றிய கேள்விக்கு கடந்த கால அரசியலை பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும் யாருடனும் கூட்டணி அமைக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் நேற்று சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த திடீர் மீட்டிங் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான முதற்கட்ட பேச்சு வார்த்தை முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், "கடந்த காலங்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி அண்ணாமலை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே" என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த நத்தம் விஸ்வநாதன், "தலைமை எந்தக் கூட்டணி அமைத்தாலும் மகிழ்ச்சிதான். கடந்த கால அரசியலை பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது" என்று தெரிவித்தார்.
அதேசமயம், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "அ.தி.மு.கவை பொறுத்தவரை தி.மு.கவை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள். தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும். தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்" என்று தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி, கூட்டணி பேச்சு குறித்து மழுப்பலாக பதில் சொன்ன அதேசமயம், பாஜக - அதிமுக கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார் நத்தம் விஸ்வநாதன்.
-
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா?












Click it and Unblock the Notifications