Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“இனி ராஜ் கவுண்டர் இல்லை.. ராஜ்குமார்”! திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக புதிய திராவிட கழகம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புதிய திராவிட கழகம் கட்சியின் தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார். இதுவரை கே.எஸ்.ராஜ் கவுண்டர் என்று அழைக்கப்பட்டு வந்த நான், இன்று முதல் எஸ்.ராஜ்குமார் என்று அழைக்கப்படுவேன் எனவும், சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

2026 சட்ட்சபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே நிலையில் அரசியல் காட்சிகள் பம்பரமாக சுற்றி தேர்தல் வேலை செய்து வருகின்றனர். கூட்டணியில் கட்சிகளை இணைக்கும் வேலையிலும் முன்னணி கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. சட்டசபை தேர்தலில் தங்கள் அணிக்கு ஆதரவை வலுப்படுத்துவதற்காக சிறிய கட்சிகள், அமைப்புகளிடம் பேசி வருகின்றனர்.

Former KS Raj Gounder Now S Rajkumar PDK Extends Support to DMK Alliance

ராஜ் கவுண்டர் - திமுக கூட்டணி

இந்நிலையில், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புதிய திராவிட கழகம் தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார். மேலும், இதுவரை கே.எஸ்.ராஜ் கவுண்டர் என்று அழைக்கப்பட்டு வந்த நான், இன்று முதல் எஸ்.ராஜ்குமார் என்று அழைக்கப்படுவேன் எனவும், சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க புதிய திராவிட கழகம் கட்சி உறுதுணையாக இருக்கும். திமுக தலைமையில் 234 தொகுதிகளிலும் அறிவிக்கப்படவுள்ள வேட்பாளர்கள் வெற்றி பெற புதிய திராவிட கழக நிர்வாகிகள் அயராது பாடுபடுவோம்.

புதிய திராவிடக் கழகம்

பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் புதிய திராவிடக் கழகத்தின் சார்பாக தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களை நடத்தப் போகிறோம். கே.எஸ்.ராஜ் கவுண்டர் என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் எஸ். ராஜ்குமார் என்று மட்டுமே பெயரை பயன்படுத்த போகிறேன். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இதே பெயரில் தான் போட்டியிடப் போகிறேன்" எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "வரும் சட்டமன்ற தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். வேட்டுவக்கவுண்டரின் உட்பிரிவுகளான வேட்டுவக்கவுண்டர், வேட்டைக்காரர், வேட்டைக்கார கவுண்டர், பூலூவர், பூலுவக்கவுண்டர், புன்னம் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்கார நாயக்கர், வேடர், வேட்டுவர், வில்வேடுவர், மலைவாழ் வேட்டுவர், வால்மீகி, வலையர் ஆகிய பெயர்களில் தமிழகத்தில் BC, MBC, SC, ST, DNC ஆகிய பிரிவுகளில் உள்ள அனைத்தையும் MBC-யாக வேட்டுவக் கவுண்டர் என்ற பெயரில் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

ராஜ் கவுண்டர்

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் வெல்லட்டும் சமூக நீதி' என்ற பெயரில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்திய புதிய திராவிட கழகம் கட்சியின் தலைவர் ராஜ் கவுண்டர். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராஜ் கவுண்டர் என பலமுறை குறிப்பிட்டுப் பேசி இருந்தார்.

சமூக நீதி பேசும் திமுகவின் எதிர்கால முகமாக அடையாளம் காட்டப்படும் உதயநிதி ஸ்டாலின், சாதியை பிரதானப்படுத்தும் ஒரு கட்சித் தலைவரின் பெயருடன் உள்ள சாதி பெயரை பல முறை குறிப்பிட்டு பேசியதும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், ராஜ் கவுண்டர், தான் இனிமேல் ராஜ்குமார் எனக் கூறி இருக்கிறார். திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரிலேயே அவர் பெயர் மாற்றம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+