திடீர் நெஞ்சுவலி.. முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை சொந்த ஜாமினில் விடுவித்தது திருப்போரூர் நீதிமன்றம்!
சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் இன்று காலையில் கைது செய்யப்பட்டார். பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேஸ் தாஸை கைது செய்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது ராஜேஷ் தாஸுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

தையூரில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் கைது செய்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தையூரில் உள்ள பங்களாவில் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து மிரட்டிச் சென்றதாக ராஜேஸ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் புகார் அளித்தார். விவாகரத்து வழக்கு விசாரணைக்கு இடையே பீலா வெங்கடேசன் வீட்டிற்கு சென்று ராஜேஷ் தாஸ் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தண்டனை உறுதி செய்தது.
இதனையடுத்து ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட் கைதுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கிடையே அவரது மனைவி பீலா விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார். பீலா ராஜேஷ் என்ற பெயரில் இருந்து ராஜேஷ் என்ற பெயரை நீக்கி, தனது தந்தை பெயரை பின்னொட்டாகச் சேர்த்து பீலா வெங்கடேசன் என்று மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் ஆஜர்: இந்நிலையில், இன்று கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜேஷ் தாஸை 4 மணி நேரத்திற்கும் மேல் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பை தாராததால் அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறி அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுக்கும் சட்டப்பிரிவு 353 கீழ் ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, திருப்போரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உள்ளே செல்லும்போது இயல்பாக இருந்தார் ராஜேஷ் தாஸ்.
திடீர் நெஞ்சு வலி: சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், வியர்த்த நிலையில் அவரை அழைத்து வந்த வாகனத்திலேயே தண்ணீர் கொடுத்து அமர வைத்து உள்ளனர். இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார் ராஜேஷ் தாஸ்.
தனக்கு மிகவும் உடல் சோர்வாக உள்ளதாக ராஜேஷ் தாஸ் கூறிய நிலையில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். சொந்த ஜாமீனில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை விடுவித்துள்ளது திருப்போரூர் நீதிமன்றம்.
-
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக











Click it and Unblock the Notifications