Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருக்கும் இந்த நிலைமை வர கூடாது..பறந்து பறந்து பந்தாடிய பொன்னம்பலம்! இப்போ வீல்சேரில் முடங்கிட்டாரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை திரையில் பார்த்தாலே மிரள வைத்த வில்லன் நடிகர் பொன்னம்பலம். உயரமான உடல் அமைப்பு, கரகரப்பான குரல், கடுமையான பார்வை, பறந்து பறந்து சண்டை போடும் ஸ்டைல் என வில்லன் என்றால் பொன்னம்பலம் தான் என்ற அளவுக்கு அவர் சினிமாவில் தனி அடையாளம் பெற்றவர். ஆனால் இன்று, அதே பொன்னம்பலம் நடக்கக்கூட முடியாமல் வீல் சேரில் அமர்ந்திருக்கும் நிலை ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

பொன்னம்பலம் தனது வாழ்க்கையை ஸ்டண்ட் கலைஞராகத் தொடங்கினார். பல திரைப்படங்களில் ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்தபடி, சினிமாவில் மெதுவாக தனது இடத்தை பிடித்தவர். ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்த அவர், "நாட்டாமை" திரைப்படம் மூலம் ஒரே படத்தில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

அந்த படத்தில் சரத்குமாருக்கு வில்லனாக நடித்த பொன்னம்பலம், தனது பெயரிலேயே கதாபாத்திரம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. "தாய்க்கிழவி நீளமா பேசாத... மூச்சு வாங்கும்" என்ற அவரது வசனம் 90-களில் சினிமா ரசிகர்களின் காதில் இன்று வரை ஒலிக்கிறது.

Ponnambalam cinema tamilnadu

நடிகர் பொன்னம்பலம்

அந்த ஒரு வசனமே அவரை தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன் நடிகர்களின் பட்டியலில் நிரந்தரமாக இடம் பிடிக்கச் செய்தது. அதன் பிறகு கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார். சில படங்களில் கௌரவ வேடங்களிலும் அவர் தோன்றினார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ள பொன்னம்பலம், தென்னிந்திய சினிமாவில் பரவலாக அறியப்பட்ட முகமாக இருந்தார்.

சிறுநீரக கோளாறு

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதன் பின்னணியில், விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவர் பேசிய வாழ்க்கை அனுபவங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில், திடீரென அவருக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டயாலிசிஸ் சிகிச்சை

தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், பொருளாதார சிக்கலும் அவரை வாட்டியது. மருத்துவ செலவுகளுக்கு கூட பணம் போதாத சூழலில், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து உதவி கோரினார். அந்த நேரத்தில் பல திரையுலக பிரபலங்கள் உதவிக்கு முன்வந்தனர். குறிப்பாக நடிகர் சிரஞ்சீவி நேரடியாக உதவினார். அதேபோல் கமல் ஹாசன், சரத்குமார், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களும் அவருக்கு ஆதரவாக நின்றனர். அதன் பிறகு சிகிச்சை முடிந்து பொன்னம்பலம் வீடு திரும்பினார்.

ரசிகர்கள் சோகம்

ஆனால் நோய் முழுமையாக குணமாகவில்லை. தற்போது அவர் வாரத்திற்கு 2 முதல் 3 நாட்கள் வரை டயாலிசிஸ் செய்து வருகிறார். ஒரு காலத்தில் திரையில் பறந்து சண்டை போட்ட நடிகர், இன்று நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரது வீட்டின் அருகே நடைபெற்ற ஒரு துக்க நிகழ்வில், வீல் சேரில் அமர்ந்தபடியே கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் அவர் வீல் சேரில் இருந்தபடியே ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+