மூத்த குடிமக்களுக்கும் போலீஸாருக்கும் இலவச பஸ் பயணம்! தமிழக அரசு அதிரடி! என்னென்ன ஆவணங்கள் தேவை?
சென்னை: மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவைக்கான டோக்கன் குறித்து சென்னை போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய, டிசம்பர் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்ய, இந்த டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. ஒரு மாதத்திற்கு பத்து டோக்கன்கள் என்ற வீதத்தில், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா டோக்கன்கள் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை பெற விரும்பும் மூத்த குடிமக்கள் தங்களுடைய இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, வயது சான்று, இரு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன்களை டிசம்பர் 21 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை உரிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக 42 மையங்களில் வார விடுமுறையின்றி அனைத்து நாட்களும் காலை 8 மணி முதல் இரவ 7.30 மணி வரை வழங்கப்படும். இவை வழக்கம் போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் அலுவலக நாட்களில் வழங்கப்படும். இதற்கு குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ கல்விச் சான்றிதழ்/ வாக்காளர் அடையாள அட்டை), 2 கலர் போட்டோக்கள் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
அது போல் அரசு பேருந்துகளில் போலீஸார் இலவச பயணம் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது. அரசு பேருந்துகளில் கிரேட் 2 கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீஸார் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம். இதற்கான உத்தரவானது உள்துறை வழங்கியுள்ளது. எனினும் இது தொடர்பாக உள்துறைக்கும் போலீஸுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் போலீஸுக்கு இலவவச பஸ் பாஸ் அளிக்குமாறு போக்குவரத்துத் துறைக்கு உள்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, மடிக்கணினி, பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயணம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து பயணத்தின் மூலம் மட்டுமே பெண்கள் மாதந்தோறும் ரூ 1000 மிச்சப்படுத்துவதாக தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சலுகை மூத்த குடிமக்களுக்கும் கொடுக்கப்படுகிறது.
-
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications