"எங்க மயானங்களை இலவசமாக யூஸ் பண்ணிக்கலாமே".. ஸ்டாலினுக்கு டிவீட் போட்டு டேக் செய்த ஈஷா!
ஈஷா மயானங்களில் சடலங்களை புதைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக தகனம் செய்யலாம் என்று ஈஷா அறிவித்துள்ளது.. இதுகுறித்த ட்வீட்டை, முதல்வர் ஸ்டாலின், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத் துறை ஆகியோருக்கு டேக் டேக் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தற்போது கொரோனாவைரஸ் தொற்று பெருகி கொண்டிருக்கிறது. இதனால், உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றன..
வடமாநிலங்களில் தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களை புதைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.. ஆம்புலன்ஸ்களில் சடலங்களுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்..

கங்கை நதி
மேலும் கங்கை ஆற்றிலும் சடலங்களை வீசி வருகின்றனர்.. தமிழகத்திலும் இப்படி ஒரு நிலைமை தலைதூக்கியது.. ஆனால், அதற்குள் தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு சரிசெய்துள்ளது.. இந்நிலையில், தமிழகத்தில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக தகனம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

ஈஷா
ஈஷா யோகா மையம் சார்பில், கோவையில் 12, சென்னையில் 4, நாமக்கல் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம், 18 மயானங்கள் செயல்பட்டு வருகின்றன.. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகளை ஈஷா வழங்கி வருகிறது. மேலும், அனைத்து மயானங்களும் நல்ல முறையில் தூய்மையாக பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

மரியாதை
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த மயானங்களில்தான் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஊழியர்கள் மரியாதையுடன் தகனம் செய்ய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது ஈஷா அறக்கட்டளை.. இது தொடர்பாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளது.

ட்வீட்
அதில், "ஈஷா மயானங்கள், கோவிட் தொற்றால் காலமானவர்களுக்கு கட்டணமின்றி தகன சேவையை அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கும்... இந்த உயிர் கொல்லி வைரசுக்கு அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தோருக்கு ஆதரவாய் இருக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த ட்வீட்டை, தமிழக முதல்வர் ஸ்டாலின், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத் துறை ஆகியோருக்கு டேக் செய்யப்பட்டுள்ளது.
-
திமுக - காங்., கூட்டணியில் புதிய புயல்.. ‘கை' வென்ற 7 தொகுதிகளை கேட்கும் ‘உதயசூரியன்'.. குழப்பம் -
கருணாநிதி வென்றது எப்படி? நெடுஞ்செழியன் வீழ்ந்தது எப்படி? சூழ்ச்சியா? முயற்சியா? -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
2,000 ரூபாய் 'மெகா' பிளான்.. தகரும் தடை? கோட்டையை நோக்கி திமுகவின் மகளிர் உரிமை தொகை அஸ்திரம்! -
சென்னை தலைமை செயலகத்திற்கு வரையும் முக்கிய அரசு அதிகாரிகள்.. பறந்த உத்தரவு.. நாளை முக்கியமான நாள் -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
ஒரு வாக்குச்சாவடி கூட விடாமல் சக்கர நாற்காலிகள் இருக்கும்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு! -
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ -
நெல் சாகுபடி வரலாறு காணாத உயர்வு.. கொள்முதலை ‘டபுள்’ மடங்கு ஆக்கக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்












Click it and Unblock the Notifications