இலவச வீட்டு மனை பட்டா வரப்போகுது.. தமிழக அரசின் குட்நியூஸ்.. "மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள்".. அட
சென்னை: ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு குறித்த முக்கிய தகவல் ஒன்றை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் என்பது, கிராமங்களில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கென்றே ஒதுக்கப்பட்ட பிரத்யேகமான இடங்களாகும்.. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் பராமரித்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அரசாங்கம் சார்பில் செயல்பட்டு வருபவை.

ஆனால், நாளடைவில் மேய்ப்பதற்கு பயன்படுத்தப்படாமல், தனிப்பட்ட முறையில் இந்த இடங்களை பொதுமக்கள் சிலர் உபயோகித்து கொள்வதாகவும், அந்த இடங்களில் வீடுகள், கடைகளை கட்டி மக்கள் பயன்படுத்தி கொள்வதாகவும் கடந்த 2015-ல் ஹைகோர்ட் கூறியிருந்தது. அதுமட்டுமல்ல, கடந்த 2021வரை கிட்டத்தட்ட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேய்க்கால் நிலங்களில் வசித்துள்ளதும் உறுதி செய்யப்பட்டது.
ஹைகோர்ட்: ஆனால், அதற்கு பிறகும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தினை காலி செய்யாமல் பயன்படுத்தி வருவதால், ஏற்கனவே அந்த இடத்திற்கு அவர்கள் பட்டா வாங்கியிருந்தாலும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட் தெரிவித்திருந்தது..
அந்த இடங்களில் வசிப்போருக்கு மற்றொரு வீடு தந்தால், அம்மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தினை காலி செய்து கொள்வார்கள் என்றும் அடுத்த கோரிக்கை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.. மொத்தத்தில், மேய்க்கால் இடங்கள் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களாகவே உள்ளன.
முக்கிய கேள்வி: இந்நிலையில், சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜி, ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.. வரும் மார்ச் மாதத்திற்குள் முதல்வர் ஸ்டாலின் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசும்போது, "மேய்க்கால் புறம்போக்கு நிலம் தொடர்பாகவும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு வழங்குவது குறித்தும், ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பெருத்த நம்பிக்கை: அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது... நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்தார். அந்தவகையில், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு விரைவில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications