இனி தமிழகத்தில் மலைப் பிரதேசங்களில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம்.. இன்று முதல் தொடக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் மலைப் பிரதேசங்களில் இயங்கும் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த தேர்தல் சமயத்தில் திமுக அளிக்க முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்பது தான். இந்த வாக்குறுதிக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதேபோல தேர்தலில் வென்ற உடன் மகள் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றியது. நகர்ப்புறங்களில் இயங்கும் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பணிக்கலாம் என்ற முறை உள்ளது.
இதற்குத் தமிழ்நாடு முழுக்க மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் வேலைக்குச் செல்லும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகப் பெரியளவில் பலனடைந்துள்ளனர். இதற்கிடையே மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் எனப் பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெற்று இருந்தது. அதன்படி மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக உதகையில் இத்திட்டம் இன்று தொடங்கப்படும்.. பிறகு படிப்படியாக மற்ற மலை கிராமங்களிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications