"என்னாச்சு".. கன்னத்தை தடவி கேட்ட ஓபிஎஸ்.. "சும்மாதான்".. பட்டும் படாமல் பதில் சொன்ன "மெகா புள்ளி"
வைகைசெல்வத்திடம் தாடி குறித்து விசாரித்தார் ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவில் நித்தம் ஒரு களேபரம் ஓடிக் கொண்டிருந்தாலும், சுவாரஸ்யங்கள் மற்றொருபுறம் சத்தமில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது..!
ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை நல்ல மதிப்பை பெற்று வருபவர் வைகை செல்வன்... அவரது பேச்சு, எழுத்துக்கு ஒரு வாசகர் கூட்டமே உள்ளது.
அதனால் அதிமுகவில் எப்போதுமே பலம் பொருந்திய நபராக வலம் வந்து கொண்டிருப்பவர்.. எந்த கருத்தை சொன்னாலும் அதை ஆழமாகவும், ஆணித்தரமாகவும் எடுத்து வைப்பவர்.

அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டைத் தொகுதியில் போட்டியிடும் வைகைச் செல்வன், ஏற்கனவே 2011ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று அமைச்சராகவும் இருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் மறுபடியும் களம் கண்டார். ஆனால், 10 வருட அதிமுக ஆட்சியில் மக்கள் ரொம்பவே அதிருப்திக்குள்ளாகி இருந்தனர்..

பிரச்சாரம்
அதனால், தொகுதியில், வைகைச்செல்வன் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஈடுபட்டபோது, அமைச்சராக இருந்தபோது என்ன செய்தீங்க? என்று ஒரு தாத்தா கேள்வி எழுப்பிய சம்பவமும் நடந்தது. "நீங்கள் இதற்கு முன் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தபோது தொகுதிக்கு என்ன செய்தீர்கள்? இப்போ வாக்கு கேட்டு வந்துட்டீங்களா?" தொகுதியில் பல இடங்களில் பொதுமக்கள் கேள்விகளை கேட்டனர்.. இந்த தேர்தலிலும் வைகைசெல்வன் தோற்றுவிட்டார்.

வைகைசெல்வன்
அதற்கு பிறகு அவரது செயல்பாடுகள் குறைந்து வருகிறது.. சமீப காலமாக வைகைச்செல்வனும் முகத்தில் தாடி வைத்து காணப்படுகிறார். இந்நிலையில், நேற்று ஓபிஎஸ்ஸும், வைகைச்செல்வனும் மதுரை ஏர்போர்ட்டில் பேசி கொண்டிருந்தனர்.. ஏர்போர்ட்டில் இருக்கும் டீக்கடையில் 2 பேரும் டீ குடித்து கொண்டிருந்தனர்.. அப்போது ஓபிஎஸ், வைகைசெல்வனின் தாடியை பார்த்து, என்னாச்சு? தாடி எதுக்கு? என்று சைகையிலேயே கேட்டார். அதற்கு வைகைச்செல்வன் "சும்மாதான் வெச்சிருக்கேன்" என்று சைகையிலேயே ஓபிஎஸ்ஸுக்கு பதிலளித்தார்.

என்ன காரணம்?
உண்மையிலேயே வைகைச்செல்வன் எதுக்கு தாடி வைத்திருக்கிறார்? தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டதால் வருத்தமா? அல்லது கொரோனாவுக்கு சலூன் கடைகள் எல்லாம் மூடியிருப்பதால் ஷேவ் செய்ய முடியவில்லையா? அல்லது சசிகலா - எடப்பாடி இடையே நடந்து வரும் உட்பூசல்களை பார்த்து வேதனையில் தாடி வளர்த்துள்ளாரா? தெரியவில்லை...!
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications