சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா.. இன்னும் 6 மணி நேரத்திற்கு தாக்கம் குறையாது!

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    7 மாவட்டங்களில் பாதிப்பு | சிலர் பலி | ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது- வீடியோ

    சென்னை: கஜா புயலை தொடர்ந்து தமிழகம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

    கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. இன்று தமிழகம் முழுக்க கனமழை பெய்து வருகிறது.

    இந்த புயலில் தாக்கம் குறைய இன்னும் 6 மணி நேரம் ஆகும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    கரையை கடந்தது

    கரையை கடந்தது

    கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இரவு 12 மணியில் இருந்து 3 மணிக்கு இடையில் கஜா புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

    7 மாவட்டங்கள் பாதித்தது

    7 மாவட்டங்கள் பாதித்தது

    இந்த புயல் காரணமாக மொத்தம் 7 மாவட்டங்கள் பாதித்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை, இராமேஸ்வரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்கள் மோசமாக புயலில் பாதித்தது. அதேபோல் புதுச்சேரி மாவட்டம் புயல் காரணமாக மோசமாக பாதிப்பை சந்தித்து இருக்கிறது.

    மிக மோசமான தாக்கம்

    மிக மோசமான தாக்கம்

    இந்த புயல் வேதாரண்யம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மோசமாக தாக்கி இருக்கிறது. வேதாரண்யம் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் விழுந்து இருக்கிறது. பல இடங்களில் புயல் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளது.

    6 மணி நேரம் பாதிப்பு தொடரும்

    6 மணி நேரம் பாதிப்பு தொடரும்

    இந்த புயலின் பாதிப்பு 6 மணி நேரம் தொடர்ந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்று மதியம் வரை இந்த புயல் காரணமாக காற்று வீசும். இந்த சமயத்தில் தமிழகம் முழுக்க கனமழை பெய்யும்.

    English summary
    Gaja Storm hits at its worst in TN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X