வங்கி கணக்கில் எஸ்எம்எஸ் முறையில் பணம் திருடும் கும்பல்.. சென்னை போலீஸ் முக்கிய அறிவிப்பு
சென்னை: யாரேனும் உங்களை தொடர்புகொண்டு தவறுதலாக அல்லது அதிகமாக பணம் அனுப்பிவிட்டதாக எஸ்எம்எஸ்சை காரணம் காட்டி பணம் கேட்டால் ஏமாற வேண்டாம் என்று சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷ்னர் எச்சரித்துள்ளார்
வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு புதிய ரூட்களை யோசிக்கிறார்கள். அப்படி அவர்கள் யோசிக்கும் சில யோசனைகளில் வெற்றியும் பெறுகிறார்கள்.
அவர்களின் பணம் பறிக்கும் புதிய முயற்சிகள் குறித்து ஒவ்வொரு முறையும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து வருகிறார்கள். உஷாராக இருங்கள் மக்களே..

வங்கி கணக்கு
சென்னை அடையாறு துணை கமிஷ்னர் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்ந ட்வீட் பதிவில், யாரேனும் உங்களை தொடர்புகொண்டு தவறுதலாக அல்லது அதிகமாக பணம் அனுப்பிவிட்டதாகவும் எனவே பணத்தை திருப்பி அனுப்புமாறு கூறினால் போலியாக அனுப்பப்படும் SMS களை மட்டும் பார்த்து ஏமாற வேண்டாம். உங்கள் வங்கி கணக்கை பரிசோதித்து கொள்ளவும்" என்று கூறியுள்ளார்,.

வாட்ஸ் அப்
அவரது அறிப்பில் உள்ள வாட்ஸ் அப் இமேஜ் பதிவில், போலியாக உருவாக்கிய பணம் கிரிடிட் ஆன எஸ்எம்எஸ் முதலில் வருகிறது. பின்னாலேயே வங்கி கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக ஒருவர் வாட்ஸ் அப் செய்கிறார. அந்த எஸ்எம்எஸ்யை பார்க்கும் பெண், ஆம் எனக்கு பணம் வந்துள்ளது என்கிறார்.

போலியானது
உங்கள் வங்கி கணக்கை சொல்லுங்கள், பணத்தை அனுப்புகிறேன் என்கிறார் அந்த பெண். அப்படியே பேட்டிஎம் இருக்கா என்று கேட்டு அதன்படி அனுப்ப சொல்கிறார். இப்படியாக பணம் பறிபோகிறது. இறுதியில் பார்த்தால் அந்த எஸ்எம்எஸ் முற்றிலும் போலியானது என்பது பின்னரே தெரிகிறது.

போலீஸ் அலார்ட்
எனவே தான் சென்னை சைபர் கிரைம் போலீசார்,. உங்களுக்கு வரும் எஸ்எம்எஸ்ஸை நம்ப வேண்டாம் என்றும் வங்கி கணக்கில் பார்த்து பணம் வந்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். எனவே இனி மக்களே எஸ்எம்எஸ்யை கூட நம்ப வேண்டாம். விழிப்புடன் இருப்பது மட்டுமே ஏமாற்றத்தில் இருந்து தப்ப முடியும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications