பேனா பேனாவாக இருக்கக் கூடாது.. வரலாறு படைக்க வேண்டும்.. பாஜகவை கடுப்பேற்றும் காயத்ரி
பேனா சின்னம் தமிழகத்தின் ஜனநாயகத்தின் குரலாக இருக்க வேண்டும்- காயத்ரி ரகுராம்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் வைப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அக்கட்சியிலிருந்து விலகிய காயத்ரி ரகுராமோ தமிழக மக்களின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ரூ 81 கோடி மதிப்பீட்டில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 290 மீட்டர் தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்திற்கும் அமைக்கவுள்ளது.
அதாவது மொத்தம் 650 மீட்டர் தொலைவில் கடலில் பாலம் அமைக்கப்பட்டு அதில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க மாதிரி வடிவங்கள் எல்லாமே தயார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

கலைவாணர் அரங்கம்
கலைவாணர் அரங்கில் இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைய பேர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பாஜக சார்பில் கருத்து தெரிவித்த எம்சி முனுசாமி கூறுகையில் கடலில் நினைவு சின்னம் அமைப்பது மிகவும் அபத்தமானது. கடற்கரையை காக்கும் ஒரே சமுதாயம் மீனவர்கள்தான்.

மெரினா கடற்கரை
மெரினா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் உள்ளன. யாரும் கடற்கரைக்கு உள்ளே நினைவுச் சின்னம் அமைக்கவில்லை. கருணாநிதி தான் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தார். ஆனால் கருணாநிதிக்கு வைக்கப்படும் பேனா சின்னமோ 137அடியாகும்.

திருவள்ளுவரைவிட கருணாநிதி உயர்ந்தவரா
அப்படியென்றால் திருவள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா என முனுசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கருத்துக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பேனா பொதுவானது, பேனா சிலைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது வெறும் பேனாவாக இருக்கக் கூடாது.

சுற்றுலாவை பார்வையிட
அனைவரும் சுற்றுலா பார்வையிடக் கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும். இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் பேனா என்பது பல விஷயங்களைக் குறிக்கும். பேனா ஒரு சிறந்த கருவியாகும். சிறந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளது. அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
-
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications