ஆடுகள் வளர்க்க உங்களுக்கு ஆசையா? கோழி, பன்றி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் தரும் சூப்பர் திட்டம்
சென்னை: நம்முடைய நாட்டில் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பல உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் பிற உள்ளூர் வங்கிகளோடு இணைந்து சிறப்பு திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த திட்டம் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (AHIDF) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.. மத்திய அரசின், தேசியக் கால்நடை ஆணையத்தின் கீழ், கால்நடை வளர்ப்புக்காக சிறப்பு மானியமும் வழங்கப்படுகிறது. இதன் நோக்கம், கோழி, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறி, வெள்ளாடு இனங்களை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதலே ஆகும்.

வெள்ளாடுகள், பன்றி பண்ணை
அந்தவகையில், கோழி, வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள், பன்றி பண்ணை அமைக்கவும் தீவனம், தீவனப்பயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் மொத்த திட்ட செலவில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.. இந்த திட்டத்தின் கீழ் தனிநபர், சுயஉதவிக் குழுக்கள் (SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு (FPO), விவசாயக் கூட்டுறவுகள், கூட்டுப் பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள் ஆவார்கள்.. பயனாளிகள் சொந்தமாக அல்லது குத்தகைக்கு நிலம் வைத்திருக்க வேண்டும். பயனாளிகள் தொழில் முனைவோர் அல்லது தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும். பயனாளிகள் திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும். பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் 2 தவணைகளாக வழங்கப்படும்.
கால்நடை துறை அதிரடி அறிவிப்பு
இதுகுறித்துதான், கால்நடைத்துறை தற்போது மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அரசு மானியத்தில், கால்நடை பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை அறிவித்துள்ளது. அந்த அறிக்கை இதுதான்: "தமிழகத்தில், புதிய கால்நடை பண்ணைகள் அமைக்க, அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன்படி, நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க, 25 லட்சம் ரூபாய் வரையும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க, 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையும் மானியம் வழங்கப்படுகிறது.
தீவன சேமிப்பு பண்ணை வசதிகள்
பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க 15 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை, வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு, தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணை அமைக்கவும், தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில், தனிநபர், சுயஉதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள், https://nlm.udyamitra.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்! -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
சிலிண்டர் தர மாட்டோம்! புதிய கனெக்ஷன் தர மாட்டோம்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு! யாருக்கு பொருந்தும் -
துபாய்க்கு போகும் விமானங்கள் ரத்து.. இண்டிகோ நிறுவனம் கொடுத்த முக்கிய மெசேஜ்! -
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி












Click it and Unblock the Notifications