மேலவளவு வழக்கு டூ கோகுல்ராஜ் கொலை வழக்கு: யார் இந்த வழக்கறிஞர் ப.பா. மோகன்?
சென்னை: கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கில் நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்தவர் வழக்கறிஞர் பவானி. பா.மோகன். வழக்கறிஞராக மோகனின் பங்களிப்பு என்ன என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
2015ம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை என்ற மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று வரும சூழலில், இந்த தீர்ப்பு வர மிக முக்கிய காரணம், வழக்கறிஞர் பவானி பா மோகன் என்ற ப.பா. மோகன் தான். இவருக்கு இது புதிதல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மேலவளவு கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்ந்து வாதாடி அவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்தவர் தான் பா மோகன்.
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், தந்தை பெயரான பாலுவையும், பவானியையும் இனிசியலாக சேர்த்து ப.பா. மோகனாக இவர் அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பாலு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் தனது அடிப்படையே கம்யூனிஸ்ட் கட்சி தான் என்று கூறினார் ப.பா. மோகன்.
மாணவ பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அழைத்ததன் பேரில், கட்சி அலுவகத்தில் தங்கி பணியை பார்த்துக் கொண்டவாறு வழக்கறிஞர் படிப்பை படித்து முடித்தார் மோகன். ஈரோட்டில் பல தொழிற்சங்க போராட்டங்களில் பங்கேற்றுள்ளார் மேலும் சாக்கடையில் விழுந்து இறந்த தொழிலாளர்களுக்காக நஷ்ட ஈடு கேட்டு போராடி உள்ளார். ஜமுக்காள தொழிலாளர்களுக்காக சங்கம் வைத்தும் போராடி உள்ளார் பா மோகன்.
வழக்கறிஞராக இவரது முதல் வழக்கு, பவானி அருகே பர்கூர் சோளகர் பகுதி மக்கள் புளியங்காய் விற்பனை செய்ய அதில் பங்கு கேட்டு பொய் வழக்கு போட்ட போலீஸாருக்கு எதிராக எதிர்த்து வாதாடி வெற்றி பெற்றதுதான் என வழக்கறிஞர் மோகன் பெருமிதம் தெரிவித்தார்.
இதற்கு பிறகு வீரப்பன் வழக்கில், வீரப்பனை பிடிக்க பழங்குடி மக்களுக்கு போலீஸ் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாதாடினார். அதன்பிறகு 1997ம் ஆண்டு மேலவளவு படுகாலை வழக்கில் 17 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை கிடைக்க சட்டப்போராட்டம் நடத்தியது வழக்கறிஞர் ப.பா.மோகன் தான்.
உடுமலைப்பேட்டை கவுசல்யா சங்கர் மற்றும் தருமபுரி இளவரசன் திவ்யா ஆகியோரது வழக்குகளிலும் ஆஜராகி உள்ளாராம்.இது போன்ற ஆணவ கொலைகள் வழக்கில் பல தொந்தரவுகளையும் சந்தித்தாராம். வழக்கறிஞர் குழுவையே சமூக நீதிக்ககாக போராடுவதற்கு உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற வழக்குகளை எடுத்து நடத்துகிறேன் என்று முன்பு ஒருமுறை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியில் பா மோகன் கூறியுள்ளார்.
இப்படி நீண்ட நெடிய சட்டப்போராட்டங்களுக்கு சொந்தக்காரரான பா மோகனின் வரலாற்றில், கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பும் புதிய வரவாக இணைந்துள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications