மேலவளவு வழக்கு டூ கோகுல்ராஜ் கொலை வழக்கு: யார் இந்த வழக்கறிஞர் ப.பா. மோகன்?
சென்னை: கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கில் நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்தவர் வழக்கறிஞர் பவானி. பா.மோகன். வழக்கறிஞராக மோகனின் பங்களிப்பு என்ன என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
2015ம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை என்ற மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று வரும சூழலில், இந்த தீர்ப்பு வர மிக முக்கிய காரணம், வழக்கறிஞர் பவானி பா மோகன் என்ற ப.பா. மோகன் தான். இவருக்கு இது புதிதல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மேலவளவு கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்ந்து வாதாடி அவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்தவர் தான் பா மோகன்.
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், தந்தை பெயரான பாலுவையும், பவானியையும் இனிசியலாக சேர்த்து ப.பா. மோகனாக இவர் அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பாலு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் தனது அடிப்படையே கம்யூனிஸ்ட் கட்சி தான் என்று கூறினார் ப.பா. மோகன்.
மாணவ பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அழைத்ததன் பேரில், கட்சி அலுவகத்தில் தங்கி பணியை பார்த்துக் கொண்டவாறு வழக்கறிஞர் படிப்பை படித்து முடித்தார் மோகன். ஈரோட்டில் பல தொழிற்சங்க போராட்டங்களில் பங்கேற்றுள்ளார் மேலும் சாக்கடையில் விழுந்து இறந்த தொழிலாளர்களுக்காக நஷ்ட ஈடு கேட்டு போராடி உள்ளார். ஜமுக்காள தொழிலாளர்களுக்காக சங்கம் வைத்தும் போராடி உள்ளார் பா மோகன்.
வழக்கறிஞராக இவரது முதல் வழக்கு, பவானி அருகே பர்கூர் சோளகர் பகுதி மக்கள் புளியங்காய் விற்பனை செய்ய அதில் பங்கு கேட்டு பொய் வழக்கு போட்ட போலீஸாருக்கு எதிராக எதிர்த்து வாதாடி வெற்றி பெற்றதுதான் என வழக்கறிஞர் மோகன் பெருமிதம் தெரிவித்தார்.
இதற்கு பிறகு வீரப்பன் வழக்கில், வீரப்பனை பிடிக்க பழங்குடி மக்களுக்கு போலீஸ் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாதாடினார். அதன்பிறகு 1997ம் ஆண்டு மேலவளவு படுகாலை வழக்கில் 17 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை கிடைக்க சட்டப்போராட்டம் நடத்தியது வழக்கறிஞர் ப.பா.மோகன் தான்.
உடுமலைப்பேட்டை கவுசல்யா சங்கர் மற்றும் தருமபுரி இளவரசன் திவ்யா ஆகியோரது வழக்குகளிலும் ஆஜராகி உள்ளாராம்.இது போன்ற ஆணவ கொலைகள் வழக்கில் பல தொந்தரவுகளையும் சந்தித்தாராம். வழக்கறிஞர் குழுவையே சமூக நீதிக்ககாக போராடுவதற்கு உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற வழக்குகளை எடுத்து நடத்துகிறேன் என்று முன்பு ஒருமுறை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியில் பா மோகன் கூறியுள்ளார்.
இப்படி நீண்ட நெடிய சட்டப்போராட்டங்களுக்கு சொந்தக்காரரான பா மோகனின் வரலாற்றில், கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பும் புதிய வரவாக இணைந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications