விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
சென்னை: ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ51,000-த்தை தாண்டியிருப்பது பொதுமக்களக் பெரும் அதிர்ச்சியடைய உள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தைத் தொட்டிருப்பது நடுத்தர மக்களின் நகை கனவுகளை தகர்த்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துதான் வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத்தான் வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கொரோனா காலத்தில் அதாவது 2020-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ30,000 இருந்தது. அடுத்த ஒரே ஆண்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ35,000 ஆக அதிகரித்தது. கடந்த 2022-ம் ஆண்டில் ரூ40,000 ஆக உயர்ந்த ஒரு பவுன் தங்கத்தில் விலை தற்போது ரூ51,000-த்தை தாண்டிவிட்டது.
2023-ம் ஆண்டில் ரஷ்யா- உக்ரைன் யுத்தம், இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ45,000 ஆக அதிகரித்தது. தற்போது விண்ணைத் தொடும் உச்சமாக வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ51,000 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ46,520-க்கு விற்பனையானது. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ48,000-த்தை கடந்த நிலையில் மாத இறுதியில் ரூ51,000-த்தை தாண்டிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ25,000-க்கு உயர்ந்துள்ளது.
சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது இருந்து வருகிறது. வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்யும். இந்த ஆண்டு இறுதியில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ55,000-த்தை எட்டும் என்கின்றனர்.
1920-ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ21 ஆக இருந்தது. 2001-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ3,000 என்ற அளவில் இருந்தது. 2010-ம் ஆண்டில் ரூ15,000; 2020-ம் ஆண்டில் ரூ ரூ30,000-த்தை தாண்டிய ஒரு பவுன் தங்கம் இப்போது ரூ51,000-த்தை எட்டியிருப்பது நடுத்தர மக்களை ஏக்கப் பெருமூச்சுவிட வைத்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications