வீடு கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. விதிகள் அடியோடு மாறியது.. தமிழக அரசு சூப்பர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 2,500 சதுரடி நிலத்தில், 3,500 சதுரடி பரப்பளவில் கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கு ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து, அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும் உடனடியாக கட்டிட அனுமதி அடுத்த நொடி வழங்கப்படுகிறது. இந்த முறைப்படி தரைத்தளம் மற்றும் ஒரு தளம் கொண்ட கட்டிடங்களுக்கு அதிகபட்சமாக 7 மீட்டர் உயரம் வரை அரசு அனுமதி தந்தது. ஆனால் இப்போது இனி சுயசான்றிதழ் முறையில் 2 மாடி கட்டிடங்களுக்கும் அனுமதி வழங்குகிறது.
தமிழ்நாட்டில் கட்டிடம் கட்ட அனுமதி பெற சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், அதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் புகார் எழுந்தது.இதையடுத்து தமிழக அரசு 2,500 சதுர அடி நிலப்பரப்புக்குள், 3,500 சதுர அடி வரையிலான கட்டுமானப் பரப்பளவு, மற்றும் 7 மீட்டருக்குள் உயரம் கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் அனுமதி அளக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

சுயசான்றிதழ் அனுமதி எப்படி வழங்கப்படுகிறது
வீடு மற்றும் கட்டிடம் கட்டுவோர், விண்ணப்பிக்கும் போது, தங்கள் நில ஆவணங்கள், கட்டட வரைபடங்கள் போன்றவற்றை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இவை அனைத்தும் அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை என அவர்கள் சுய சான்றிதழ் அளிக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்தஒரு சில நொடிகளில் அனுமதி கிடைத்துவிடும்.
ஒரு லட்சம் பேருக்கு அனுமதி
அதேநேரம் சுயசான்றிதழ் கொடுத்து, அதன்மூலம் பெற்ற அனுமதியில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரருக்கு அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்படும் இது கடந்த ஆண்டு முறையில் நடைமுறையில் இருக்கிறது. இந்த முறையின் கீழ் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சுயசான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி பெற்றுள்ளார்கள்.
விதிகள் தளர்வு
இந்த முறையில் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் ஒரு தளம் கொண்ட கட்டிடங்களுக்கு அதிகபட்சமாக 7 மீட்டர் உயரத்தை 10 மீட்டர் உயரத்துக்கும், ஒரு தளம் என்பதனை அதிகபட்சமாக 2 தளம் என்றும் விதிகளை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
சுயசான்றிதழ் முறையில் அனுமதி
இதுதொடர்பாக தமிழக அரசின் வீட்டு வசதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணையில் கூறுகையில், "தமிழ்நாட்டில் 2,500 சதுர அடி மனையிடத்தில் 3 ஆயிரத்து 500 சதுர அடி வரை தரைதளம் மற்றும் முதல்தளம் கொண்ட கட்டிடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கப்படுகிறது.
10 மீட்டர் கட்டிடம் (2 மாடி வீடு)
வாகனம் நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் 2 தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கும் இனி சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்படும். அதற்காக தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும் கட்டிட உயரம் 7 மீட்டரில் இருந்த 10 மீட்டராகவும் உயர்த்தப்பட்டுள்ளது " இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்?












Click it and Unblock the Notifications