சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்.. திருச்செந்தூருக்கு மகிழ்ச்சி.. திடீர் அறிவிப்பு வெளியிட்ட தெற்கு ரயில்வே
சென்னை: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது திருச்செந்தூர் உள்ளிட்ட ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில்தான், பணிகள் நிறைவடைந்தன.

பிறகு, மின்சார ரயில் சேவையாக மாற்றப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் மாதம் முதல், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் 10 நிமிடம் பயண சேவையாக நேரம் அதிகரிக்கப்பட்டது.
அதாவது இந்த மின்சார சேவை ரயிலானது திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும். இதுவரை டீசல் மூலம் மட்டுமே இயக்கப்பட்டு வந்த ரயில்கள் இப்போது, மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
அதிரடி அறிவிப்பு: இப்போது இன்னொரு அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் - திருச்செந்துார் விரைவு ரயிலானது, சூப்பர் பாஸ்ட் அதாவது, அதிவிரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.
ரயில் பாதை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடந்து வரும்நிலையில், ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு ரயில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
"எழும்பூரில் இருந்து மாலை 4:10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 6:10 மணிக்கு திருச்செந்துார் செல்லும். இதற்கு முந்தைய நேரத்தை ஒப்பிடுகையில் 40 நிமிடங்கள் முன்னதாகவே செல்லும் மறுமார்க்கமாக திருச்செந்துாரில் இரவு 8:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:25 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதற்கு முந்தைய நேரத்தை ஒப்பிடுகையில், 15 நிமிடங்கள் பயண நேரம் குறையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி: இனிமேல், பயண நேரம் 40 நிமிடங்கள் குறையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ள இந்த அறிவிப்பானது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications