ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டாஸ் பாய்ந்தது.. சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு
சென்னை: புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது டிஜிபி அலுவலகம் முன்பு விசிகவினர் தாக்குதல் நடத்தினர். அப்போது பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசிகவினர் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிகவினர் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. விசிக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் உதயகுமார் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்
புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை செய்து வருகிறார். ஒரு வீடியோவில் திருமாவளவனை ஒருமையில் பேசியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.
இந்த வீடியோவை பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோபமடைந்து ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தினர். சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலக நுழைவு வாயில் அருகே சென்றபோது, 'ஏர்போர்ட்' மூர்த்தியை விசிகவை சேர்ந்தவர்கள் 3 பேர் அடித்து தாக்கினர். ஒருவர் செருப்பால் அடித்தார். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்கினார்.
இரவோடு இரவாக கைது
அப்போது கத்தியால் விசிக நிர்வாகி ஒருவரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தடுக்க முயன்றும் பலன் இல்லை. டிஜிபி அலுவலகம் முன்பு நடந்த இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே கத்தியால் தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில், விசிகவினர் அளித்த புகாரின் பேரில் மெரினா போலீஸார் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியதன் காரணமாக இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏர்போர்ட் மூர்த்தி மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்கோயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குண்டாஸ் சட்டம் பாய்ந்தது
எனினும், ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. விசிக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் உதயகுமார் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்த நிலையில் தான் தற்போது ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். தற்போது சிறையில் இருக்கும் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications