Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டாஸ் பாய்ந்தது.. சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது டிஜிபி அலுவலகம் முன்பு விசிகவினர் தாக்குதல் நடத்தினர். அப்போது பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசிகவினர் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிகவினர் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. விசிக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் உதயகுமார் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

goondas-act-slapped-on-airport-moorthy-chennai-police-commissioner-arun-issues-order

ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்

புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை செய்து வருகிறார். ஒரு வீடியோவில் திருமாவளவனை ஒருமையில் பேசியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.

இந்த வீடியோவை பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோபமடைந்து ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தினர். சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலக நுழைவு வாயில் அருகே சென்றபோது, 'ஏர்போர்ட்' மூர்த்தியை விசிகவை சேர்ந்தவர்கள் 3 பேர் அடித்து தாக்கினர். ஒருவர் செருப்பால் அடித்தார். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்கினார்.

இரவோடு இரவாக கைது

அப்போது கத்தியால் விசிக நிர்வாகி ஒருவரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தடுக்க முயன்றும் பலன் இல்லை. டிஜிபி அலுவலகம் முன்பு நடந்த இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே கத்தியால் தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில், விசிகவினர் அளித்த புகாரின் பேரில் மெரினா போலீஸார் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியதன் காரணமாக இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏர்போர்ட் மூர்த்தி மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்கோயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குண்டாஸ் சட்டம் பாய்ந்தது

எனினும், ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. விசிக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் உதயகுமார் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்த நிலையில் தான் தற்போது ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். தற்போது சிறையில் இருக்கும் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+