அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. எல்லாமே மாறுது.. புத்தகம் எழுதுவது, வெளியீடு தொடர்பாக அரசாணை
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அரசு ஊழியர்களின் தமிழில் எழுதும் திறன்களை ஊக்குவிக்கும் மற்றும் பாராட்டும் நடவடிக்கையாக, அரசு ஊழியர் முன் அனுமதி பெறுவதற்குப் பதிலாக, தகுதிவாய்ந்த அதிகாரியிடம் வெறும் தகவல் கொடுத்து புத்தகங்களை வெளியிடலாம் என்ற வகையில், புதிய விதிகளைத் திருத்த அரசு முடிவு செய்துள்ளது. அதுகுறித்த விவரம்தான் தற்போது வெளியாகியிருக்கிறது.
பொதுவாக அரசு பணியாளர்கள் எவரும் அரசின் முன் அனுமதி ஆணையின்றி ஏதேனும் வணிகம் அல்லது தொழிலில், நேரடியாக அல்லது மறைமுகமாக தன்னை ஈடுபடுத்தவோ, ஏதேனும் வேலையை மேற்கொள்ளவோ கூடாது.

இருந்தாலும், அரசு பணியாளர் ஒருவர் அத்தகைய அனுமதி ஆணையின்றி தனது அலுவலக பணிகளுககு அதன்மூலம் ஊறுவிளையாது என்ற வரையறைக்குட்பட்டு, ஒரு சமூக அல்லது அற இயல்புடைய மதிப்புறு வேலை அல்லது இலக்கியம், கலைத்திறன் அல்லது அறிவியில் தன்மையிலான பணியை எப்போதாவது மேற்கொள்ளலாம் அல்லது பிழைப்புக்காக அன்றி பொழுதுபோக்காக போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கலாம்.
திடீரென வெளியான அரசாணை
ஆனால், அந்த பணியை மேற்கொள்ளக்கூடாது என அரசினால் கட்டளையிட்டால், அவர் அந்த பணியை மேற்கொள்ளக்கூடாது அல்லது விட்டுவிட வேண்டும். இதுபோல இன்னும் ஏராளமான விதிமுறைகள் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், அரசு ஊழியர்கள் புத்தகம் எழுதுவது, வெளியீடு தொடர்பான திருத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் உள்ளதாவது:
பரிந்துரைக்கப்பட்ட அதிகாரி
"தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973, எந்தவொரு புத்தகத்தையும் வெளியிடுவதற்கு அல்லது எந்தவொரு இலக்கிய அல்லது கலைப் படைப்பிலும் தன்னை வழக்கமாக ஈடுபடுத்திக் கொள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும் முன் அனுமதி பெற வேண்டும் என்றும், இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர், வெளியீட்டாளரிடமிருந்து ஊதியம் பெறும்போது உடனடியாக பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அரசு ஊழியர்களின் தமிழில் எழுதும் திறன்களை ஊக்குவிக்கும் மற்றும் பாராட்டும் நடவடிக்கையாக, அரசு ஊழியர் முன் அனுமதி பெறுவதற்குப் பதிலாக, தகுதிவாய்ந்த அதிகாரியிடம் வெறும் தகவல் கொடுத்து புத்தகங்களை வெளியிடலாம் என்ற வகையில், மேற்கூறிய விதிகளைத் திருத்த அரசு முடிவு செய்துள்ளது.
விமர்சனங்கள் - அனுமதி
அவ்வாறு செய்யும்போது, புத்தகத்தில் அரசுக்கு எதிரான எந்த விமர்சனமோ அல்லது தாக்குதலோ செய்யப்படவில்லை என்றும், புத்தகத்தில் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதிக்கும் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய உரை/உள்ளடக்கமும் இல்லை என்றும் அவர் ஒரு அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், வெளியீட்டாளரிடமிருந்து ஊதியம் அல்லது ராயல்டி பெறுவதற்கு அவர் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications