மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? அரசு ஊழியர்களை கடனாளியாக்கும் தமிழக அரசு.. சரண் விடுவிப்பு! கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 110-விதியின் கீழ் தமிழக முதல்வரின் அறிவிப்பு அரசு ஊழியர்களைக் கடனாளியாக்குவது எப்படி என்பதாகத் தான் பார்க்கிறோம். அறிவிப்புகள் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 2026ம் ஆண்டில் அரசு ஊழியர், ஆசிரியர்களிடமிருந்து 111-யை எதிர்நோக்கியே தமிழக முதல்வர் அவர்கள் விதி.110-இல் இவ்வறிப்பிப்புகளை வெளியிட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம்" என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "28-04-2025 சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் 110-விதியின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கென்று 9 அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அறிவித்துள்ளதில் பெரும்பாலும் கடன் சார்ந்த விடயங்களாகவே உள்ளது. பெறப்படும் கடன் (முன்பணம்) அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடமிருந்து திரும்பப் பெறப்படும் சூழலில் இவற்றைப் பெரிய அறிவிப்பாக அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது.

Government Employees Old Pension Scheme TNGEA

ஓய்வூதியம் அறிவிப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்து எதையும் தெரிவிக்காத தமிழக முதல்வர், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அறிவிப்புகளுக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு இவ்வளவு செலவாகிறது எனக் குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.

சொற்ப ஓய்வூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதியத்தை ரூ.2000லிருந்து ரூ.6750 ஆக உயர்த்தி வழங்கக் கேட்டு தள்ளாத வயதில் அவர்கள் போராடினால், கஞ்சிக்கே வழியில்லாமல் நடுத்தெருவில் நிற்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை அவர்களே உயர்த்திக் கொள்வார்களாம். நன்றாக இருக்கிறது இவர்களின் நியாயம்.

அரசாணைகள்

திமுகவின் தேர்தல் கால வாக்குறுதி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்பது. ஆனால் அதை அறிவிக்காமல், மூன்று வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய அதற்கென ஒரு குழுவை அமைத்து, அறிவிப்பு வெளியிட்டு மூன்று மாதங்கள் ஆகியும் அதற்கான அரசாணையை நாளது தேதி வரையில் பொதுவெளியில் வெளியிடாமல், சங்கங்கள் கேட்டுக் கொண்டதற்காக ஒன்பது மாதம் என்பதை எட்டு மாதமாக குறைத்ததாகச் சொல்வது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

எங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் பணத்தை என்ன செய்தீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல், குழுவை அமைத்திருப்பது தேவையற்றது. அரசு ஊழியர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு பழைய ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும் என்பது தான். அதேபோல புதிய ஓய்வூதியத்திட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற 39,000க்கு மேற்பட்டவர்களுக்கும், பணியிடைமரணமடைந்த 7000க்கும் மேற்பட்டவர்களுக்கும் பணிக்கொடை தொடர்பாகவோ அல்லது குடும்ப ஓய்வூதியம் தொடர்பாகவோ எந்த அறிவிப்பும் இல்லை.

பணி நியமனம்

தமிழ்நாட்டில் அரசுப் பணியிலிருந்து இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் முதன்முதலில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அரசாணை எண். 225 (தொழிலாளர் துறை), நாள் 15.02.1972 மூலம் 1972ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆட்சி பொறுப்பேற்றதும் கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை 25 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்து அரசாணை வெளியிட்டது.

மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி வழங்கக் கேட்டு கோரிக்கை வைத்தோம். அதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லை. அரசாணை எண்.33-ன்படி சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமனம் இனிவருங்காலங்களில் கிடையாது என இந்த ஆட்சியில் ஆணை வெளியிடப்பட்டது.

கிராம உதவியாளர்கள்

தற்போது கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வருவாய் துறை மானியக் கோரிக்கையின் கிராம உதவியாளர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளித்து ஆணை பிறப்பித்திருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் சட்டசபையில் தெரிவித்தார். குலக்கல்விக்கு எதிராக சமூக நீதி, திராவிட மாடல் என பேசிவரும் ஆட்சியாளர்கள் தற்போது அரசாணை எண்.184-ன்படி கிராம உதவியாளர் பணியிலிருந்து இறந்தால் அவர்களின் வாரிசுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணிநியமனம் இல்லையாம்.

கிராம உதவியாளரின் மகன்/மகள் கருணை அடிப்படையில் கிராம உதவியாளராக மட்டுமே நியமிக்கப்படுவார் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது மிகக் கொடுமையாக உள்ளது.

மதிப்பூதியம், தொகுப்பூதியம்

ஆண்டாண்டு காலமாகக் காத்திருக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், ஊர்புற நூலகர், ஊராட்சி செயலாளர், மக்கள் நலப் பணியாளர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர், காசநோய் தடுப்பு ஊழியர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர், தூய்மைப் பணியாளர் மற்றும் தூய்மைக் காவலர், குடும்ப நல ஆலோசகர், கணினி இயக்குபவர்கள் உள்ளிட்டவர்களைக் காலமுறை ஊதியத்தில் கொண்டு வருவது தொடர்பாக அறிவிப்பு ஏதுமில்லை.

சாலைப் பராமரிப்பு ஊழியர்களின் 41 மாத கால பணிநீக்க காலம், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது பற்றி அறிவிப்பு ஏதுமில்லை. மகளிர் உரிமையை நிலைநாட்டும் அரசு என தெரிவிக்கும் இந்த அரசு மகப்பேறு விடுப்பில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக ஏதும் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. சரண் விடுப்பைப் பொருத்தளவில் இந்த நாடகம் நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தது தான்.

கடனாளியாக்குகிறது

மொத்ததில் 110-விதியின் கீழ் தமிழக முதல்வரின் அறிவிப்பு அரசு ஊழியர்களைக் கடனாளியாக்குவது எப்படி என்பதாகத் தான் பார்க்கிறோம். அறிவிப்புகள் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 2026ஆம் ஆண்டில் அரசு ஊழியர், ஆசிரியர்களிடமிருந்து 111-யை எதிர்நோக்கியே தமிழக முதல்வர் அவர்கள் விதி.110-இல் இவ்வறிப்பிப்புகளை வெளியிட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம்" என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+