ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக ஊட்டி புறப்பட்டார்..பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டம்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை புறப்பட்டு சென்றுள்ளார். மூன்று நாள் பயணமாக ஊட்டி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு ஊட்டியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை கோவை புறப்பட்டு சென்றார். மூன்று நாள் பயணமாக ஊட்டி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஆளுநர் ஆர்.என். ரவி வருகையை ஒட்டி ஊட்டியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆளுநர் தங்கும் இடத்திலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஊட்டியில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் ஆளுநர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.
முன்னதாக இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ் கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். இதில், மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் பதில் அளித்தார்.
அப்போது, வாழ்க்கையில் வெற்றி பெறும் நேரத்தில் தோல்வி அடைந்தால் எப்படி அதில் இருந்து மீண்டு முன்னேறுவது என மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, "வாழ்வில் தோல்வி என எதுவுமே இல்லை. அது வெறும் சறுக்கல்கள் மட்டுமே. சறுக்கல்கள் அடையாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நான் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டேன்.
எனது திருமணம் குழந்தை திருமணம். திருமணத்தின்போது எனது மனைவி சிறுமியாக இருந்தார். எனது மனைவி கல்லூரிக்குச் செல்லவில்லை. ஆனால் எனக்கு பக்க பலமாக இருந்தார். நான் உலகத்தையே எதிர்க்கும் திறனை அவர் எனக்கு அளித்தார். அதுபோல குடும்பத்தினர் நம் பக்கம் இருந்தால் நம்மால் சாதிக்க முடியும்" என்று கூடியிருந்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications