தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து... தமிழக அரசு திடீர் அறிவிப்பு..!
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்களை ரத்து செய்துள்ளது தமிழக அரசு. இதற்கான அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டது.
கொரோனா தொற்று குறையாத நிலையில் கிராம சபை கூட்டம் நடத்துவது உகந்ததாக இருக்காது என்பதால் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளது தமிழக அரசு. கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது.

இதனிடையே கிராம சபை கூட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுகளை அவ்வளவு எளிதாக மாற்றமுடியாது. அந்தளவிற்கு மிக வலிமையான ஒரு பலத்தைத்தையும், அதிகாரத்தையும் கொண்டுள்ளது கிராம சபை. கிராமங்கள் தோறும் ஊராட்சி நிர்வாகத்தின் நிதிநிலை பற்றி கிராம சபை கூட்டங்களில் விளக்கப்படும். அது குறித்து பொதுமக்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு கூட்டத்தில் பங்கேற்கும் அந்தந்த ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முறையாக பதில் அளிக்க வேண்டும்.
ஒரு சில நிமிடங்கள் முடங்கிய ட்விட்டர்... உடனடியாக சரிசெய்யப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு..!
தமிழகத்தில் ஆண்டுக்கு நான்கு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 மற்றும் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆகிய தினங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெறும். இந்தாண்டு கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மே 1 , ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய மூன்று நாட்கள் நடந்திருக்க வேண்டிய கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
இதனிடையே கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்துவிட்டு இப்போது திடீரென ரத்து செய்திருப்பது ஏமாற்று வேலை என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ரத்து நடவடிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications