குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு வீடு தேடி வரும் நல்ல செய்தி.. ரெடியாக இருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இன்று முதல் நல்ல செய்தி வீடு தேடி வரப்போகிறது. புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்பதை இன்றே நீங்கள் அறிய முடியும். அதேபோல் புதிய குடும்ப அட்டை வாங்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ஏனெனில் நடத்தை விதிமுறைகள் முடிந்துவிட்டன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியிடப்பட்டது. மார்ச் 16 தொடங்கி ஜூன் 6ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ந் தேதியான வியாழக்கிழமை அமலில் இந்த காரணத்தால் அரசின் புதிய அறிவிப்புகள் வெளியாகவில்லை. புதிய திட்டங்கள், மக்கள் குறைதீர் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர்கூட்டங்கள் எதுவுமே நடைபெறவில்லை.. எல்லாமே தற்காலிகாக ரத்து செய்யப்பட்டன.

Great news coming from Tamil Nadu Government over New ration card

இதுதவிர தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகளின் படி, ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடத்தி ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், மதுபான வகைகள், இலவச பரிசுப்பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் காட்டப்பட்ட பொருட்கள் மட்டும் திரும்பி தரப்பட்ன.

தேர்தல் நடந்த மாநிலங்களில் எல்லாம் தீவிரமாக அமலில் இருந்த நடத்தை விதிமுறைகள் கடந்த ஜூன் 6ம் தேதி நள்ளிரவோடு தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டன. இனி பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. அதேபோல் அரசு புதிய திட்டங்கள் அறிவிக்கவும், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் எந்த பிரச்சனையும் இல்லை. இதேபோல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய குடும்பஅட்டை தரவும் இனி எந்த கட்டுப்பாடும் இல்லை.

கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை பெற முடியாமல் தவித்து வந்தவர்கள் மற்றும் குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்ய முடியாமலும் தவித்து வந்தவர்கள் இன்று முதல் எளிதாக மாற்றங்களை செய்ய முடியும். சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு கடந்த ஒரு வருடத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு அதிகாரப்பூர்வ வேலை நாளான திங்கள்கிழமை (இன்று) முதல் விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளார்கள்.

தமிழகத்தில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம். ஒருவேளை ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாது என்றால். இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் நகல் ஸ்மார்ட் கார்டு, கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற அத்தனை சேவைகளும் பெற முடியும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+