Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளையாட்டு மைதானம் தனியார்மயம்.. தீர்மானத்தை வாபஸ் பெற்றது சென்னை மாநகராட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட செயற்கை புல் விளையாட்டு மைதானங்களை தனியார் மயமாக்கும் தீர்மானத்தை, மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்த தீர்மானம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

சென்னையில் 595 பூங்கா, 9 கால்பந்து மைதானம், 2 அரங்குகளை தனியார்மயமாக்க மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதன்படி செயற்கை புல் தரைகள் கொண்ட 9 கால்பந்து மைதானங்களில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.120 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு அணிகள் (5+5) ஒரு மணி நேரம் விளையாடுவதற்கு ரூ.1200 கட்டணமாக செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை இலவசமாக விளையாடி வந்த இளைஞர்கள் இனி கட்டணம் கட்டி விளையாட வேண்டுமா? என்று விளையாட்டு வீரர்கள் உட்பட திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளும், தனியார்மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

greater chennai corporation playground

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். தவிர, சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏன் இளைஞர்கள் இவ்வாறு தவறான வழியில் செல்கிறார்கள்? என்பது குறித்து ஆய்வு செய்த போது, அவர்களின் திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் போதுமானதாக இல்லை என்பதே காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எல்லா இளைஞர்களுக்கும் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். ஆனால், சென்னையில் போதுமான அளவுக்கு விளையாட்டு மைதானங்கள் இருக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். இருக்கும் கொஞ்சம் நஞ்சம் விளையாட்டு மைதானங்களையும் தனியார்வசம் ஒப்படைத்துவிட்டால், இளைஞர்களால் காசு கட்டி விளையாட முடியாது. எனவே, சமூக விரோத குற்றங்களில் இளைஞர்களின் பங்களிப்புகள் அதிகரித்துவிடும். ஆகவே தனியார்மயம் என்கிற திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த இளைஞர்களும், கால்பந்தாட்ட வீரர்களும், மாநகராட்சி மாளிகை வளாகத்தில் கால்பந்து விளையாடியும், சைதாப்பேட்டை அம்மா பூங்கா மைதானம் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து இந்த தீர்மானம் கைவிடப்படுவதாக மாநகராட்சி மேயர் அறிவித்திருக்கிறார்.

பூங்காக்களை பொறுத்தவரை, 871 பூங்காக்களில் 98 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும், 168 பூங்காக்கள் மாநகராட்சி மூலமும் பராமரிக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள 595 பூங்காக்களையும் ரூ.55.60 கோடி செலவில் தனியார் மூலம் பராமரிப்புக்கு விடவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மேலும், செனாய் நகர் அம்மா அரங்கத்தின் வாடகை ரூ.3.40 லட்சத்திலிருந்து ரூ.5.43 லட்சமாகவும், தி. நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தின் வாடகை ரூ.20,650 லிருந்து ரூ.50,000 ஆகவும் உயர்த்தி தனியாருக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகை விடும் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இதிலிருந்து மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.2.22 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இப்படி நடந்தால் சாமானிய மக்களால் மேற்குறிப்பிட்டதை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும் என்று சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+