பெரிய வேலையை பார்த்துவிட்டு போன குரோக் ஏஐ.. மாலத்தீவு பற்றி மோடி சொன்னதை என்ன பண்ணி வச்சிருக்கு பாருங்க
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு மாலத்தீவுக்கு நட்பு ரீதியாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவின் குரோக் மொழி பெயர்ப்பு சர்ச்சைக்குரிய வகையில் இருந்தது பயனர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏஐ அடிப்படையிலான தானியங்கி மொழிபெயர்ப்பு என்றாலும் இது பயனர்களுக்கு தவறான கண்ணோட்டத்தை கொடுக்கும் என்று நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவு தளமாக குரோக் ஏஐ உள்ளது. சமூக வலைத்தளங்களில் பதிவுகளுக்கு நெட்டிசன்கள் கேட்கும் சந்தேகங்கள், மொழி பெயர்ப்பு உள்ளிட்டவற்றை ஏஐ செய்து கொடுப்பதை பார்க்கமுடியும்.

தவறாக மொழி மாற்றம் செய்த குரோக்
அவ்வப்போது குரோக் ஏஐ செயல்படுகள் வரம்பு மீறி இருப்பதாக சர்ச்சைகளும் எழுந்துள்ளன. சமீபத்தில் புகைப்படத்தை ஆபாசமாக குரோக் ஏஐ பயன்படுத்தி எடிட் செய்வதாக புகார் எழுந்த நிலையில், சில நாடுகளில் இதற்கும் தடையும் விதிக்கப்பட்டது. நிலைமை விபரீதமாக சென்றதையடுத்து, எலான் மஸ்க்கும் பயனர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு ஒன்றை தவறாக மொழி மாற்றம் செய்து இருப்பது நெட்டிசன்கள் இடையே விவாதப்பொருளாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக மாலத்தீவு உள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாடான மாலத்தீவில் தற்போது சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகம்மது முய்சு தலைமையிலான ஆட்சி நடத்தி வருகிறது.
இந்தியாவுக்கு மாலத்தீவு வாழ்த்து
அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு பதவியேற்றதும் இந்தியா மாலத்தீவு இடையேயன உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விரிசல் ஏற்பட்டது. இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு முன்னாள் அமைச்சர்கள் இன ரீதியாக விமர்சனம் செய்தது இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது.
இந்தியர்கள் பலரும் தங்கள் மாலத்தீவு சுற்றுப்பயணத்தை ரத்து செய்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றுலா வருவாயை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கும் மாலத்தீவு இதனால், அரண்டு போனது. இதையடுத்து உடனடியாக மாலத்தீவு மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தற்போது இந்தியா - மாலத்தீவு இடையேயான பதற்றம் தணிந்து இயல்பான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் சுதந்திர தினம் குடியரசு தின நாட்களில் இந்தியாவுக்கு மாலத்தீவு உள்ளிட்ட நட்பு நாடுகள் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
பிரதமர் மோடி எக்ஸ் பதிவு
இதற்கு இந்திய பிரதமர் மோடியும் பதில் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் மாலத்தீவு பிரதமர் இந்திய குடியரசு தினத்திற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு உங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு நாடுகளின் மக்களின் நலனுக்காக நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். மாலத்தீவுகளின் மக்களுக்கு செழிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்." என்று பதிவிட்டு இருந்தார். இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வழக்கமான ராஜந்திர மெசேஜாக அது இருந்தது.
ஏடாகூடமாக மொழி பெயர்த்தது
ஆனால் இந்த பதிவை குரோக் ஏஐ மொழி பெயர்ப்பு செய்த பொது ஏடாகூடமாக மொழி பெயர்த்து இருந்தது. குரோக் ஏஐ மொழி பெயர்ப்பில், "சுகுரிய்யா, ராயிதுன் மஜ்லிஸ். இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா மாலத்தீவுகளில் நடத்தப்பட்டது, அதில் மாலத்தீவு அரசு கலந்து கொண்டது. இந்த சுகுரிய்யா அரசு இந்தியா எதிர்ப்பு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளது.
இந்தியா எதிர்ப்பு பிரச்சாரங்களிலும் அவர்கள் போராட்டங்களில் முன்னணியில் இருந்தனர்," என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது ஏஐயின் தவறான மொழி பெயர்ப்பு என்றாலும், பயனர்கள் இதனை நம்பி தவறாக புரிந்து கொள்ளக்கூடும் என்று நெட்டிசன்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications