முன் வைத்த காலை பின் வைக்காத திருமாவளவன்! குவியும் ஆதரவு பெருகும் உற்சாகம்! லிஸ்ட் பெரிசா இருக்கே!
சென்னை: அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறும் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலிக்கு 13 இயக்கங்களும், 10 அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவை நல்கியுள்ளன.
இதன் மூலம் விசிக தலைவர் திருமாவளவனின் பலம் பெருகியிருப்பதோடு ஆதரவுகளும் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியை இணைந்து நடத்துவோர் மற்றும் ஆதரவளிப்போர் விவரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் காற்று மாசில் டெல்லி நம்பர் 1.. கெஜ்ரிவால் களமிறக்கிய
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
1)திரு.ஆசிரியர் கி. வீரமணி
தலைவர் - திக
2)திரு. கே.எஸ். அழகிரி
தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
3)திரு. வைகோ
பொதுச் செயலாளர் - மதிமுக
4)தோழர் கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர் - சிபிஐ (எம்)
5)தோழர் இரா. முத்தரசன்
மாநில செயலாளர் - சிபிஐ
6)திரு.தொல். திருமாவளவன் எம்.பி.
தலைவர் - விசிக
7)திரு. கே.எம். காதர்மொய்தீன்
தலைவர் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
8)திரு.எம்.எச். ஜவாஹிருல்லா
தலைவர் - மனிதநேய மக்கள் கட்சி
9)திரு. தி.வேல்முருகன்
தலைவர் - தமிழக வாழ்வுரிமை கட்சி
மேற்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.
ஆதரவு கட்சிகள்:
1)தேமுதிக
2) இந்திய தேசிய லீக்
3) எஸ்டிபிஐ
4)நாம் தமிழர் கட்சி
5)சிபிஐ (எம்.எல்- விடுதலை)
6)தமிழ்ப் புலிகள் கட்சி
7)அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
8)அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்
9)தமிழர் விடியல் கட்சி
10)பீமாராவ் குடியரசு கட்சி
மேற்கண்ட 10 அரசியல் கட்சிகளும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு ஆதரவு அளித்துள்ளன.
ஜனநாயக இயக்கங்கள்:
1) திராவிடர் விடுதலை கழகம்
2) த.பெ.தி.க
3) மக்கள் அதிகாரம்
4) மே17 இயக்கம்
5)காஞ்சி மக்கள் மன்றம்
6) புலிப்படை
7)தமிழ்நாடு இளைஞர் சங்கம்
8)தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு
9) திசம்பர் 3 இயக்கம்
10) தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நலச்சங்கம்
11) தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு
12) இந்திய தவ்ஹீத் ஜமாத்
13) மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம்
மேற்கண்ட 13 ஜனநாயக இயக்கங்களும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு ஆதரவு தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருமா அழைப்பு
சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.