விண்வெளியில் முத்திரை.. ஏர்டெல் பார்ட்னர்! 36 பிரிட்டன் சேட்டிலைட்களை சுமந்து சென்ற இந்தியா ராக்கெட்
சென்னை: இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன் 36 செயற்கைக்கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 செயற்கைகோளை விண்ணில் ஏவி இருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு வருகிறது. பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் மூலம் பல செயற்கைக்கோள்கை விண்ணில் ஏவி இருக்கிறது இந்தியா.
அறிவியல், தொழில்நுட்பம், புவியியல், வானிலை, பாதுகாப்பு, ஆராய்ச்சி போன்ற பல்வேறு காரணங்களுக்காக விண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் இஸ்ரோவால் அனுப்பப்பட்டு வருகின்றன.

36 செயற்கைக்கோள்கள்
இதேபோன்று வணிக அடிப்படையில் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களையும், இஸ்ரோ இந்தியாவின் ராகெட்டுக்களின் மூலமாக வணிக அடிப்படையில் விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று 36 செயற்கைக்கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தி இருக்கிறது இஸ்ரோ.

கவுண்டவுன்
இதற்கான கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12:07 மணியளவில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இன்று நள்ளிரவு 12:07 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் அமைந்து இருக்கும் 2 வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

எடை எவ்வளவு?
திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் வகை எஞ்சின்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்ட இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 5,796 டன் எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி இருக்கிறது. இதை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டின் எடை 644 டன் ஆகும்.

பிரிட்டன் செயற்கைக்கோள்கள்
இதன் மூலம் வணிக ரீதியில் முறையாக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை இந்திய ராக்கெட் சுமந்து சென்று சாதனை படைத்து இருக்கிறது. இதன் மூலம் வர்த்தக ரீதியிலான ராக்கெட் சேவையில் இஸ்ரோ புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. விண்ணில் ஏவப்பட்ட 36 செயற்கைக்கோள்களும் இங்கிலாந்தின் ஒன் வெப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதாகும்.

ஏர்டெர்ல் பங்குதாரர்
இந்த செயற்கைக்கோள்கள் குறைந்த உயர புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அரசு, வர்த்தம், கல்வி பயன்பாட்டு சேவைகளுக்காக ஒன் வெப் நிறுவனம் இந்த செயற்கைக்கோள்களை வடிவமைத்து இருக்கிறது. உலகின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஒன் வெப்-இன் முக்கிய பங்குதாரராக இந்தியாவின் பாரதி ஏர்டெல் நிறுவனம் உள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications