டுபாக்கூர் ரசீதை வைத்துக் கொண்டு ரூ. 43 கோடி ஜிஎஸ்டி மோசடி.. சென்னை பெண் கைது
சென்னை: போலியாக ரசீது தயாரித்து, ஜிஎஸ்டியில் 43 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னையில் ஐடி நிறுவன பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சென்னையில் நாதேஷ் டிரேடு இம்பெக்ஸ், அன்மோல் ஃபெர்ரோ இம்பெக்ஸ், விவான் டிரேடு இம்பெக்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் இயக்குநராக பூனம் சர்மா என்பவர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜிஎஸ்டி-யில் இன்புட் கிரெடிட் என்ற சலுகையை பெறுவதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு பொருட்களை விநியோகித்ததாக அவர் போலியாக ரசீது தயாரித்துக் கொடுத்துள்ளார்.
அதன்படி, அவர் 43 கோடி ரூபாய் அளவுக்கு சலுகை பெற முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதற்குண்டான கமிஷனை பூனம் சர்மா பெற்றது தெரிய வந்ததால், அவரை ஜிஎஸ்டி இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் ஜிஎஸ்டி இயக்குநரக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தமது குற்றத்தை ஒப்புக் கொண்ட பூனம் சர்மா, அந்த மோசடியை அரங்கேற்றியது எவ்வாறு என்றும் விளக்கி உள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜிஎஸ்டி இயக்குநரக அதிகாரிகள், இது போன்று சம்பவங்கள் நடப்பது சென்னையில் இது 3வது முறை என்றும், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications