குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்... பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை: மதுரை கோட்டத்தில் நடைபெற இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக, சில எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட இருப்பதாகத் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து வருகிற 10, 17, 24 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்று பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், மதுரை கோட்டத்தில் நடைபெற இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக, சில எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவிலில் இருந்து வருகிற 5, 9, 12, 16, 19, 20, 30 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16352), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாகச் செல்லும். திண்டுக்கல் செல்லாது. கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரியில் இருந்து வருகிற 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12666), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாகச் செல்லும். கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல் செல்லாது. கூடுதலாக சிவகங்கை, புதுக்கோட்டை ஆகியவற்றில் நின்று செல்லும்.
குருவாயூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை), 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 17, 18, 19, 20, 23, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாகச் செல்லும். மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை செல்லாது. கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து வருகிற 10, 17, 24 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (17070), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாகச் செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல்லாது. கூடுதலாக சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
தூத்துக்குடியில் இருந்து வருகிற 29-ந்தேதி காலை 7.40 மணிக்கு புறப்பட்டு காச்சிகுடா (ஹைதராபாத்) செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (17616), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகச் செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது. கூடுதலாக, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகியவற்றில் நின்று செல்லும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
போடு தகிட தகிட.. அடுத்த ஆக்சனுக்கு தயாரான ICF! ரெடியாகுது வந்தே பாரத் சரக்கு ரயில்! எல்லாம் மாறுதே! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்














Click it and Unblock the Notifications