அதெப்படி திருமாவளவன் இப்படி சொல்லலாம்.. கமலை கைது பண்ணுங்க.. எச். ராஜா பிடிவாதம்
கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: கமல் விஷயத்தை பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்ததே எச்.ராஜாதான்! 2 நாட்களாக கமல் மீது வழக்குகள், புகார்கள், கண்டனங்கள், எழுந்தாலும், அவரை கைது செய்ய வேண்டும் என்பதே எச்.ராஜாவின் ஒரே நோக்கமாக உள்ளது!
நாளுக்கு நாள் கொழுந்துவிட்டு எரிந்து வரும், கமலின் பேச்சிற்கு ண்டனங்களும், ஆதரவுகளும் பெருகி வருகின்றன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் தனது கருத்தை கமலுக்கு ஆதரவாக சொல்லி உள்ளார்.

கோட்சேவிற்கு ஆதரவாக மோடியின் பேச்சு இருப்பதாக கண்டனம் தெரிவித்த திருமாளவளவன், கமலுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பை அளிக்கவும் வலியுறுத்தினார். திருமாவளவன் இப்படி சொன்னது, எச்.ராஜாவுக்கு ஆகவில்லை போலும். உடனடியாக வந்து ஒரு ட்வீட்டை போட்டுவிட்டார்.
"கமலுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பை அளிக்கவேண்டும்!" திருமாவளவன் வலியுறுத்தல்...!" என்ற செய்தியை பதிவிட்டுவிட்டு, அத்துடன் "பள்ளப்பட்டியில் கலவரத்தை தூண்டும் நோக்குடன் பேசிய கமலஹாசனை அரசு கைது செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
பள்ளப்பட்டியில் கலவரத்தை தூண்டும் நோக்குடன் பேசிய கமலஹாசனை அரசு கைதுசெய்ய வேண்டும் https://t.co/fMB6RteILp
— Chowkidar H Raja (@HRajaBJP) May 15, 2019
அது மட்டுல்லை, "திருப்பரங்குன்றத்தில் கமல் பரப்புரையில் இந்துக்களை இழிவு படுத்த மாட்டார் என்று எதிர்பார்ப்போம்" என்றுகூட எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
திருப்பரங்குன்றத்தில் கமல் பரப்புரையில் இந்துக்களை இழிவு படுத்த மாட்டார் என்று எதிர்பார்ப்போம்.
— Chowkidar H Raja (@HRajaBJP) May 15, 2019
ஆனால், பாஜக, இந்து அமைப்பினரின் பேச்சை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் கமல், இன்றைய பிரச்சாரத்தில்கூட, கேஷூவலாகவும், அசால்ட்டாகவும் பேசி வருகிறார்.












Click it and Unblock the Notifications