குடியுரிமை திருத்தச் சட்டத்தை "ஃப்ளோசார்ட்" மூலம் விளக்கம்.. அமித்ஷாவை மிஞ்சிய எச் ராஜா
Recommended Video
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் "ப்ளோசார்ட்" மூலம் பாஜக தேசிய செயலாளர் விளக்கியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்ஸி, ஜோரோஸ்டிரியன்கள் உள்ளிட்டோர் 2015-ஆம் ஆண்டு முன்னர் இந்தியாவில் அகதிகளாக வந்திருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் அந்த திருத்தம்.
இதில் முஸ்லீம்கள், இலங்கை தமிழர்களின் பட்டியல் இல்லை. இதனால் நாடு முழுவதும் போராட்டம் நிலவி வருகிறது.

எச் ராஜா
இந்த சட்டத்தை சிலர் எதிர்க்கவும், சிலர் ஆதரிக்கவும் செய்கின்றனர். இன்னும் சிலர் பட்டும் படாமல் கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டம் நடத்துவோருக்கு குடியுரிமை சட்டம் குறித்து எளிதாக புரிய வைப்பதற்காக எச் ராஜா மிகவும் மெனக்கெட்டுள்ளார்.
ஃப்ளோசார்ட்
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு "ஃப்ளோசார்ட்" வரைந்துள்ளார். அவர் கூறுகையில் குடியுரிமை சட்டத் திருத்தம் 2019 என்ற தலைப்பில் முறையான ஆவணங்கள் உள்ளனவா, ஆம் எனில் இந்தியாவில் வசிக்கலாம். இல்லை என்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தவரா நீங்கள் என இரு கேள்விகள் வருகின்றன.

2014-ஆம் ஆண்டுக்கு பின்னர்
இதைத் தொடர்ந்து மேற்கண்ட கேள்விக்கு ஆம் என்றால் இந்தியாவிற்குள் எப்போது நுழைந்தீர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் இல்லை என்றால் குடியுரிமை இல்லை. 2014-ஆம் ஆண்டு முன், 2014-ஆம் ஆண்டுக்கு பின் என இரு ஆப்ஷன்கள் உள்ளன.

இந்தியாவில் வசிக்கலாம்
2014-முன் என்றால் மதக்காரணங்களுக்காக துன்புறுத்தப்பட்டீர்களா? ஆம் எனில் நீங்கள் இந்தியாவில் வசிக்கலாம். இல்லை என்றால் குடியுரிமை இல்லை. 2014-ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவில் நுழைந்திருந்தால் குடியுரிமை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications