நன்மை தீமைகளை ஆராயாத அரசன் மெல்ல மெல்ல அரசை இழப்பான் - எச். ராஜா திருக்குறள் ட்வீட்
தினசரியும் ட்விட்டரில் அரசியல் செய்யும் எச். ராஜா திடீரென்று திருக்குறள் ஒன்றை பதிவு செய்து அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார். எதற்காக இந்த ட்வீட் என்று பலருக்கும் புரியவில்லை ஒருவேளை புரிய வேண்டிய
சென்னை: சமூக வலைத்தளங்களில் பதிவுகளை போட்டு அரசியல் செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தினசரியும் ட்விட்டர் பரபரப்பாக எதையாவது பதிவு செய்து கொண்டிருப்பார். இந்த நிலையில் நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் திருக்குறளை வைத்து ஒரு பதிவு போட்டிக்கிறார்.

வள்ளுவம் அறிவோம்:
இன்றைய குறள்:-
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான் என்று பதிவிட்டுள்ளார் எச். ராஜா.

எச். ராஜாவின் இந்த பதிவு எதற்கானதாக இருக்கும் என்று தெரியவில்லை. அதே நேரத்தில் தற்போது டி.சர்ட் போட்டு இந்தி தெரியாது போடா என்று பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக இந்த பதிவினை போட்டிருக்கிறாரோ என்னவோ, அப்படி பார்த்தால் திமுக வேணாம் போடா என்ற டி சர்ட் போட்டும் கூடத்தான் பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
எது எப்படியோ எச். ராஜாவின் ட்விட்டர் பதிவு புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரிதான்.












Click it and Unblock the Notifications