யார் யாருடைய கூண்டுக்கிளி? அக். 5 க்கு பின் தெரியும்- ஸ்டாலின் மீது ஹெச். ராஜா பாய்ச்சல்
சென்னை: யார் யாருடைய கூண்டுக்கிளியாக செயல்பட்டார் என்று அக்டோபர் 5 க்கு பிறகு தெரியவரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜகவின் மாஜி தேசிய செயலாளர் ஹெச். ராஜா பதில் கொடுத்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அதில், பாஜக அரசின் கூண்டுக் கிளியாக சிபிஐ மாறிவிட்டது வெட்கக் கேடானது என ஸ்டாலின் சாடியிருந்தார்.

இதை தமது ட்விட்டர் பக்கத்திலும் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவுக்கு பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹெச். ராஜா பதில் கொடுத்துள்ளார்.

அதில், யார் யாருடைய கூண்டுக்கிளியாக செயல்பட்டார் என்று அக்டோபர் 5 க்கு பிறகு தெரியவரும் என ஹெச். ராஜா கூறியுள்ளார். 2ஜி வழக்கில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை அக்டோபர் 5-ந் தேதி முதல் நாள்தோறும் நடைபெற உள்ளது. இதனைக் குறிப்பிட்டே மு.க.ஸ்டாலினை விமர்சித்திருக்கிறார் ஹெச். ராஜா.












Click it and Unblock the Notifications