மீண்டும் இடைத்தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்: நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்
Recommended Video
சென்னை: நாங்குநேரி சட்டசபை உறுப்பினர் பதவியை ஹெச் வசந்தகுமார் ராஜினாமா செய்துள்ளார்.
நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த ஹெச் வசந்தகுமார் போட்டியிட்டார். கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட வசந்தகுமார் அமோக வெற்றிபெற்றார்.
இதைத்தொடர்ந்து நாங்குநேரி சட்டசபை உறுப்பினர் பதவியை அவர் இன்று ராஜினாமா செய்தார். இதுதொடர்பான விலகல் கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் வசந்தகுமார் இன்று அளித்தார.

வசந்தகுமார் நன்றி
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாங்குநேரி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுமா என்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வசந்தகுமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவி காலியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

மீண்டும் இடைத்தேர்தல்
அதோடு ஒரு தொகுதி காலியானால் அந்த தொகுதிக்கு அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி அடுத்த 6 மாதத்திற்குள் தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

தயாராகும் தமிழகம்
தற்போதுதான் தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க தமிழகம் தயாராகிவருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications