தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் எம்.பி வசந்தகுமார்.. 2-ஆவது மக்கள் பிரதிநிதி!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு மரணமடைந்த 2ஆவது மக்கள் பிரதிநிதி வசந்தகுமார் ஆவார். தமிழகத்தில் முதன் முதலாக கொரோனாவுக்கு பலியானவர் எம்எல்ஏவாக இருந்த ஜெ அன்பழகன் .
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தொட்டுள்ளது. இந்த நோய்க்கு மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் என பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைகிறார்கள். சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார்கள்.
ரோலிங் சேரில் பிஸ்னஸ் உலகை சுற்றியவர்.. தமிழகத்தின் பிஸ்னஸ் மேக்னட்.. யார் இந்த வசந்தகுமார்!?
அப்பல்லோவில் அனுமதி
அந்த வகையில் கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்பியாக இருந்த வசந்தகுமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடந்த 10-ஆம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிமோனியா
அவர் தீவிர சிகிச்சை பிரிவில் (சிசியூ) வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கடுமையான கோவிட் நிமோனியா ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 24 மணி நேரமும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை இன்று மோசமடைந்தது.
கவலைக்கிடம்
இதை அறிந்த அவரது அண்ணன் மகளும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் சென்னை வந்திருந்ததாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இவரது உடல்நிலை மேலும் மோசமாகி இன்று காலமாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், நண்பர்கள், தொழிலதிபர்கள் என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
கொரோனாவுக்கு மரணம்
தமிழகத்தில் கொரோனாவுக்கு மரணமடைந்த 2வது மக்கள் பிரதிநிதி வசந்தகுமார். அதுபோல் கொரோனாவுக்கு இறந்த முதல் தமிழக எம்பியாவார். முன்னதாக திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் 10-ஆம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.