விழுப்புரம் உள்பட 3 மாவட்டங்களில்.. அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு.. மாணவர்களே நோட் பண்ணுங்க
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலையில் அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. வரும் ஜனவரி 2 ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதிக்குள் தேர்வை முடிக்கவும் உத்தவிட்டுள்ளது. விடுமுறையை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை போலவே இந்த 3 மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வட மாவட்டங்களை பதம் பார்த்தது. கடந்த 30 மற்றும் 1 ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் இடைவிடாது விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால், விழுப்புரம், கடலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.

பெஞ்சல் புயல் கரை கடந்தபொது, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ஒரே நாளில் 50 செ.மீ., மழை கொட்டியுள்ளது. இதனால் விழுப்புரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை விட்டு ஓரிரு நாட்கள் ஆன போதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களிலும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இனி திங்கட் கிழமை தான் விழுப்புரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் வெள்ளம் பாதித்த 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களிலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. வரும் ஜனவரி 2 ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதிக்குள் தேர்வை முடிக்கவும் உத்தவிட்டுள்ளது.
மழைநீர் வடிந்து பள்ளிகள் திறக்கும்போது 10, 11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடைபெறும். விடுமுறையை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை போலவே, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலையிலும் விடுமுறை அளிக்கப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications