இ-சார்ஜிங் ஸ்டேஷன் வருகிறது.. இனிமே வண்டி நிக்காது.. வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தமிழ்நாட்டுக்கே ஹேப்பி
சென்னை: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி வரப்போகிறது.. இதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இ-மின்சார வாகனங்களின் எண்ணிக்கைகள், தொடர்ந்து அதிகரித்தபடியே வருகிறது.. இதற்கான தேவைகளும், வரவேற்பும் வாகன ஓட்டிகளிடம் அதிகரித்து கொண்டே உள்ளது.. இந்தியாவை பொறுத்தவரை, மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை பெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு நிறுவனங்கள் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வமும் காட்டி வருகின்றன..

தமிழ்நாடு: நம்முடைய தமிழகத்தில்கூட, வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, ஹைவேஸ்களில், 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அதாவது, வாகனங்களை நிறுத்தி, சார்ஜ் செய்யும்விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்படுகிறதாம். அந்தவகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் தலா 25 கிமீ தூரத்துக்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு தமிழக மின்வாரியமும் திட்டமிட்டதாகவும், இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்களை அமைக்க 100 இடங்களை கண்டறிந்து, அதற்கான டெண்டர் விடப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
மெட்ரோ ரயில் நிலையம்: சென்னையில், மெட்ரோ ரயில் நிலையம், சில வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்க்குள் போன்றவற்றில் பொது சார்ஜிங் மையங்கள் உள்ளதைபோலவே, பிற மாவட்டங்களிலும், சில இடங்களில் சார்ஜிங் மையங்கள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் எங்கிருக்கின்றன என்ற சரியான விபரம், நிறைய பேருக்கு தெரிவதில்லை.
அதனால்தான், சார்ஜிங் மையம் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள, தனி வெப்சைட், மொபைல் செயலி என இரண்டையுமே கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.. சார்ஜிங் மையங்கள் எந்தெந்த இடத்தில் உள்ளன? எவ்வளவு கி.மீ. தூரத்தில் உள்ளன? என்பது உள்ளிட்ட விபரங்களை இந்த மொபைல் ஆப்பில் எளிதாக தெரிந்து கொள்ள முடியுமாம்.
இணையதளம்: இந்த இணையதளம், மொபைல் போன் செயலியில் அறியும் வசதியை, தமிழக அரசு அடுத்த மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாம். இதுகுறித்த தகவல்தான் தற்போது வெளியாகியிருக்கிறது. டீலர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் ஒரே தளத்தில் தெரிந்து கொள்ள வசதியாக, மின்சார வாகன வெப்சைட், மொபைல் போன் ஆப்-ஐ, தமிழக அரசு அடுத்த மாதம் அறிமுகம் செய்ய போகிறதாம்..
மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனாலும், சார்ஜிங்' மையம் இருக்குமா? என்ற அச்சம் காரணமாக, வெளியூர்களுக்கு ஓட்டி செல்ல வாகன ஓட்டிகள் தயங்குகிறார்கள்.. அதனால்தான், மின்சார வாகனத்திற்கென தனி மொபைல் செயலி, இணையதளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மகிழ்ச்சி: அதில், வீட்டில் இருந்து எங்கு செல்கிறார்களோ, அந்த இடங்களில் உள்ள சார்ஜிங் மையங்கள், மின்சார வாகனத்தின் பயன் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள முடியுமாம்..!!












Click it and Unblock the Notifications